பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விழா தந்த விழிப்பு

(of கரும் சிங்காரமும் மருத்துவமனை யை அடைந்தனர். அப்போது அறிவா னந்தம் அவன் அம்மாவுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டபோது கவ லை தோய்த்த முகத்துடன் பேசினான் சேகர் :

'அறிவானந்தம்! இப்போ, அம்மாவுக்கு எப் படி இருக்கு?

'இப்போ, பரவாயில்லை சேகர் அபாய கட் டத்தைத் தாண்டிட்டதாக டாக்டர் சொன்னார்.'

தழதழத்த குரலில் பதில் அளித்தான் அறி

வானந்தம்.

'உனக்கு ரொம்பக் கஷ்டம்'டா. நாளைக் குப் பேச்சுப் போட்டிக்குக் கூட உன்னாலே வர முடியாது. இல்லையா?" அறிவானந்தத்தை நோக்கி ஆதங்கத்தோடு கேட்டான் சிங்காரம். அவன் பதிலைத் தெரிந்து கொள்ள அவன் உள் ளம் துடித்தது. அறிவானந்தத்தின் முகத்தை ஆவ லோடு நோக்கினான் சிங்காரம்.