பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 81

ன்று சிங்காரத்துக்கு மகிழ்ச்சி தாள வில்லை. இது நாள் வரை பரிசுக்கு ஏங்கிய ஏக்கம் தீரப் போகிறதே என்ற பெருமை. பல நாள் கனவு நனவாகப் போகும் பெருமிதம். அந்த இனிய நேரத்தை ஆவலோடு எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். தன் போட்டிப் பேச்சை எல்லோரும் பாராட்டுவார்கள் என்பதை எண்ணியபோது மகிழ்ச்சி பொங்கியது. அவனறி யாமல் அவன் உதடுகள் விரிந்தன. மகிழ்ச்சிப் பெருக்கு வெளிப்பட்டது. மனப்பாடம் செய்தி ருந்த பேச்சை தனக்குத்தானே சொல்லிக் கொண் டான். வெற்றியை நிச்சயித்துக் கொண்டான்.

சிங்காரத்தின் மகிழ்ச்சி நிலை அவன் நண் பர்களுக்கு விநோதமாகப்பட்டது. அவன் மகிழ்ச் சிக்குக் காரணம் கண்டறிய அவன் நண்பன் சந்திரன் முனைந்தான்.

6