பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'98 - விவாக மானவர்களுக்கு - புக்களில் எங்கேனும் ஒன்றிரண்டு சுக்கில உயிர்கள் தங்கி யிருந்துவிடக் கூடும். இத்துடன் ஆண் குறியை எடுத்து எடுத்து உள்ளே விடும்போது சில உயிர்கள் கர்ப்பப்பையின் கழுத்திலுள்ள கோழையில் கலந்து கொள்ளும். அந்தக் கோழையைக் டுஷ் கழுவி வெளியாக்காமல் இருந்துவிடக் கூடும். அதலுைம் சுக்கில உயிர்கள் தங்கிவிட ஏதுவுண்டு. (4) சில சமயங்களில் பெண்ணுனவள் பெண் குறிக் குழாயை இறுக்கிலுைம் இறுக்காவிட்டாலும் டுஷ் ஜலம் சுக்கில உயிர்களில் சிலவற்றை கர்ப்பப்பையின் வாயினுள் செலுத்தி விட்டாலும் செலுத்தி விடும். (5) நாம் முன்னல் கண்டபடி சில சமயங்களில் விந்து வெளிப்படும் பொழுது நேரே கர்ப்பப் பைக்குள் பாய்த்து விடுவதும் கர்ப்பப் பையே விந்தை உறிஞ்சி விடுவதும் உண்டு. ஆதலால் இந்த முறையும் கர்ப்பத்தடைக்கு ஏற்ற தன்று. இதை மற்ற உபயோகமான முறைகளுக்குத் துணை யாக மட்டுமே உபயோகித்துக் கொள்ளலாம். இந்த முறையைக் கர்ப்பத்தடைக்காக உபயோகிக்கா விட்ட்ாலும், பெண்குறியைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு அடிக்கடி உபயோகித்தல் நலமாகும். மெய் வாய் கண் மூக்கு டி. செவி ஆகியவற்றைச் சுத்தம் செய்வது போலவே மலத் துவாரத்தையும் மூத்திரத் துவாரத்தையும் பெண் குறியையும் சுத்தம் செய்தல் அவசியம் என்றும், மற்ற வைகளைத் தினந்தோறும் கழுவா விட்டாலும் மலத் துவா ரத்தையும் பெண்குறியையுமாவது கட்டாயமாகத் தினந் தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான வசதிகள் சகல வீடுகளிலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளைப் பல் தேய்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் சிறு வயதிலிருந்தே பழக்குவது போல், இவைகளைச் சுத்தம் செய்வதற்குப் பழக்க வேண்டும் என்றும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒழுங்காகக் தாரியங்கள் நடைபெறும் வீடுகளில் எல்ல்ாம் இவ்விதமே செய்கிருர்கள் என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் மட்டுமே செய்வதில்லை என்றும் ஹர்ர்னி புரூக் அம்மையார் கூறுகின்ருர்,