பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 00 - விவாதமானவர்களுக்கு - வந்து, பெண் குறியில் விழுந்து அங்கிருந்து கர்ப்பப்பை வழி யாகச் சினைக் குழ்ாய்க்குச் சென்று, அங்கே ஏற்கனவே சினேப் பையிலிருந்து வ்ந்து கொண்டிருக்கும் முட்டையுடன் கலந்து கருவாகி, கருப்பையில் வந்து தங்கி குழந்தையாக வளர் கின்றது. ஆகவே ஆண் மகனுடைய பீஜத்தில் உண்டாகும் சுக்கில உயிரும், பெண் மகளுடைய சினைப் பையில் உண்டாகும் சுரோணித முட்டையும் பெண் மகளுடைய சினைக் குழாயில் சேர்வதாலேயே கர்ப்பம் உண்டாகின்றது என்று அறிகின்ருேம். ஆதலால் கர்ப்பம் உண்டாகாமல் தடுக்க வேண்டு மாளுல் நான்கு வழிகளை அனுஷ்டிக்கலாம், அவையாவன: (1) ஆண் மகனுடைய விந்து-பீஜத்திலிருந்து, விந் துப் பைகளுக்குப் ப்ோகவொட்டாமலோ - பெண் மகளு டைய சின்ைப் பையிலிருந்து வரும் முட்டையைச் சினைக் குழாய் வழியாகக் கர்ப்பப் பைக்கு வரவொட்டாமலோ தடுத்துவிட்லாம். இவைகளை ஆப்பரேஷன் மூலம் செய் கிரு.ர்கள். (2) ஆண் மகனுடைய விந்து பெண்குறியில் விழாத ւմ ւգ- தடுத்து விடலாம். அதற்காக ரப்பர் உரைகள் தயாரிக் கப்படுகின்றன. அவற்றில் ஒன்றைச் சம்போக சமயம் மாட்டிக் கொண்டால் வெளியாகும் விந்து அதிலேயே தங்கிவிடும், பெண்குறியில் விழாது. (3) விந்து பெண் குறியில் விழுந்தாலும் விந்திலுள்ள சுக்கில உயிர்களைச் சில மருந்துகளால் அசைய முடியாதன வாயும் சக்தியற்றனவாயும் செய்து விடலாம். அதற்காகச் சில களிம்புகளும் மாத்திரைகளும்_தயாரிக்கப் படுகின்றன. சம்போக சமயத்தில் களிம்பில் கொஞ்சம் எடுத்து ஆண் குறியில் தடவிக் கொள்ளலாம், அல்லது பெண்குறிக்குள் பீச்சிக் கொள்ளலாம். அல்லது மாத்திரை ஒன்றைப் பெண் குறிக்குள் வைத்துக் கொள்ளலாம். வெளியாகும் விந்திலுள்ள சுக்கில உயிர்களைக் களிம்பும் மாத்திரையும் கர்ப்பப்பை வாயிலில் நுழையவொட்டாமல் முடக்கவோ கொல்லவோ செய்துவிடும்.