பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 10 I (4) விந்திலுள்ள சுக்கில உயிர்கள் கர்ப்பப்பை வாயிலை அணுகினலும், அதனுள் நுழையாதபடி வாயிலை மூடிவிட லாம். அதற்காக ரப்பர் மூடிகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு கர்ப்பப்பை வாயிலை மூடி விட்டால் அந்தச் சுக்கில உயிர்கள் கர்ப்பப்பைக்குள் நுழைந்து கர்ப்பம் உண்டாக்க மாட்டா. ஆப்பரேஷன் முறை விந்து ஆண் குறியிலிருந்து வெளியாகாமல் தடுப்பதற் காக ஆதிகாலத்தில் கையாளப்பட்ட முறை பீஜப்பையி லுள்ள இரண்டு பீஜங்களையும் எடுத்து விடுவதாகும். இந்தக் காலத்திலும் காளைகளுக்கும். குதிரைகளுக்கும் இவ்விதம் செய்வதை எல்லோரும் அறிவர். அதை விதிையடித்தல் அல்லது காயடித்தல் என்றுகூறுவார்கள். இந்த முறை பழைய காலத்தில் அரசர்களுடைய அந்புதரத்தில் வேலை செய்யும் ஆண்பணியாளருக்கே அதிகமாகச் செய்யப்பட்டு வநதது. இந்த ஆப்பரேஷன்_செய்தால், ஆண்மை போய்விடும். ஆண்குறி_எழாது. சம்போகம் செய்ய முடியாது. ணுக் குள்ளி'விசேஷ குணங்கள் போய் பெண்னுக்குள்ள விசேஷ குணங்கள் வந்துவிடும். ஆதலால் இக்காலத்தில் இந்த ஆப் ப்ரேஷன் செய்துகொள்ள் யாரும் விரும்ப மாட்ர்ர்கள். சம்போகம் செய்யச் சக்தி இருக்கவேண்டும். சந்தானம் மட்டும் உண்டாகக் கூடாது, அதற்கான ஆப்பரேஷன் உளதா என்றுதான் கேட்பார்கள். அதற்கு வைத்தியர்கள் உண்டு என்றே பதில் கூறுகிருர்கள். அந்த ஆப்பரேஷனுக்கு ' விந்துக்குழாய் வெட்டல்” என்று பெயர். அதாவது விந்து பீஜத்திலிருந்து விந்துப் பைக்கு ஏருதபடி அதற்குப் போகும் வழியாகிய விந்துக் குழாய்களைத் துண்டித்து விடுவதேயாகும். எந்த சர்ஜனும் சுலபமாகச் செய்யலாம். 1 நிமிஷ நேரமே செல்லும். குளோரோபாம்-என்னும் மயக்க மருந்து கொடுக்க வேண்டியதில்லை. அந்த இடத்தை ஸ்மரணையற்ற .தாகச் செய்யும் இஞ்செக்ஷன் மட்டுமே செய்தால் போதும். பிரமாதமான ஏற்ப்ாடுகளும் தேவையில்லை. வேறு ஒருவர் உதவியும் வேண்டாம். ஆப்பரேஷன் செய்தவுடன்ேயே