பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - விவாகமானவர்களுக்கு - எழுந்து நடக்கலாம். வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யலாம், ஆயினும் 3, 4 நாட்கள் நடமாடாமல் படுத்து ஒய்வாக இருந்தால் நல்லது. ஒரு-வாரம் புண்ணுக்கு மருந்து போட்டு வரவேண்டும். அதிகச் செலவு ஆகாது. இந்த ஆப்பரேஷன் செய்த பின்னரும் விந்து பீஜங்களில் உற்பத்தியாய்க் கொண்டுதாணிருக்கும். ஆனல் அது விந்துப் பைக்குச் செல்லாமல் இரத்தக் குழாய்களால் உறிஞ்சப் பட்டு இரத்தத்தோடு கலந்து விடுகிறது. சம்போக காலத் தில் ஆண்குறி வழியாக விந்து வராவிடினும் விந்துப்பையும் பிராஸ்டேட் கோளமும் சுரக்கும் நீர் விந்துவைப் போலவே வந்துகொண்டிருக்கும், ஆண்குறியும் நட்டமாக நிற்கக் கூடிய ஆண்மையை இழந்து விடுவதில்லை. ஆதலால் கர்ப்பம் உண்டாவது மட்டும் தவிர, சம்போக நிர்வாகமோ சம் போக இன்பமோ சற்றும் குன்றி விடாது. சம்போக நிர்வாகம் குன்றிவிடாது என்பது மட்டுமன்று இந்த ஆப்பரேஷன் செய்தவர்களுக்குச் சம்போக சத்தியும், திட்ன்ர்ச்சியின் உச்சஸ்தானத்தை அதிக நேரம் சென்று அடையும்படியாகச் செய்யும் சக்தியும் இரு மடங்கு ஆவ தாகவும், அதல்ை பெண்ணுக்கு அதிகமான நேரம் சம்போக இன்பம் அனுபவிக்க முடிவதாகவும் வைத்திய நிபுணர்கள் கூறுகிருர்கள். இந்த ஆப்பரேஷன் செய்யும்போது ஆபத்து உண்டாவ தில்லை. செய்த பின்னர் நன்மையே உண்டாகிறது. ஆளுல் இந்த ஆப்பரேஷன் செய்து கொள்பவர் கவ னிக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று உள்ளது. எப்பொ ழுதும் பீஜத்தில் விந்து உண்டாய் நிறைந்ததும் அது விந்துப் விகளில் ப்ோய்ச் சேகரமாகும் என்று கண்டோமல்லவா? ஆதலால் இந்த ஆப்பரேஷன் செய்தால் அதற்குப்பின் விந்து விந்துப்பைகளுக்குப் போகாமல் நின்றுவிடும். ஆனல் ஆப்பரேஷனுக்கு - முன்னுல்போய் நிறைந்துள்ள விந்து விந்துப்ப்ைக்ளில் இருக்கத்தானே செய்யும், அது சம்போகம் செய்யும்பொழுது வெளியே வந்து கர்ப்பத்தை உண்டாக்க முடியுமல்லவா? ஆதலால் அந்த விந்திலுள்ள சுக்கில உயிர் க்ள் சக்தியிழந்து போகும்வரை, சம்போகம் செய்யாமல் இருக்கவேண்டும். ஆப்பரேஷன் செய்து ஒருமாதம் ஆகும் வரை சம்போகம் செய்யக்கூடாது. அதன்பின் விந்துபோல்