பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 0.3" வெளியாகும் நீரை டாக்டரிடம் கொடுத்து அதில் அந்த உயிர்கள் உளவா இல்லையா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். டாக்டர் இல்லை என்று சொன்ன பிறகே சம் போகம் செய்ய ஆரம்பிக்கவேண்டும். சினைக்குழாயைத் துண்டித்தல் கர்ப்பத்தைத் தடுப்பதற்காகப் பெண்களுக்கு ஆப்பரே ஷன் செய்தல் என்பதைக் கேட்டதும், முட்டை உற்பத்தி யாகும் சினைப்பையையேனும், கருவளரும் கர்ப்பப்பையை யேனும் வெட்டி எடுத்து விடுதலோ என்று எண்ணக்கூடும். அவைகளை அப்படி வெட்டி எடுத்து விடலாம்; அவ்வித ஆப் பரேஷன்கள் செய்வதுமுண்டு. அப்படிச் செய்தால் கர்ப்ப்ம் உண்டாகமாட்டாது_ என்பதில் சந்தேகமும் கிடையாது. ஆனல் அந்த ஆப்பரேஷன்கள் அபாயகரமானவை. அத னல் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் எடுத்துவிட வேண்டிய அளவு அவைகளில் பெரிய பழுதுகள் உண்டா ல்ை மட்டுமே அந்த ஆப்பரேஷன்களைச் செய்யலாம். அத் துடன் பெண்களுக்குச் சினைப்பையை எடுத்து விடுவது ஆண் களுக்கு பீஜத்தை_எடுத்துவிடுவதற்கு ஒப்பாக, பெண்களுக் குரிய குணங்களேயெல்லாம் ஒழித்துவிடும். சம்போக இச்சை உண்டாகாமல் சிறு வயதிலேயே கிழத்தன்மை உண்டாய் விடும். அப்படியானல் பெண்களுக்கு எந்த ஆப்பரேஷன் செய்து கர்ப்பம் உண்டாகாமல் தடுக்கலாம்? அதற்குச் சினைக் குழாயைத் துண்டிக்கும் ஆப்பரேஷனைச்_செய்தால் போதும்: முட்டையைச் சினைக்குழாய் வழியாகச் செல்ல வொட்டாமல் தடுப்பதற்காகச் சினைக் குழாய்களைத் துண்டிக்கும் இந்த ஆப்பரேஷன் இப்பொழுது உலகத்தில் சகல நாடுகளிலும் செய்யப்படுகின்றன. அதுவே பண்கள் சம்பந்தமாகச் சிறந்த கர்ப்பத்தடை முறையாகக் கருதப்படுகின்றது, சினைக் குழாயைத் துண்டித்துவிட்டால் முட்டையும் கருப்பைக்கு வர் முடியாது. சுக்கில உகிரும் அத்துடன் கலக்க முடியாது. அதல்ை அந்த ஆப்பரேஷன் செய்து கொண் டவர்களுக்குக் கர்ப்பம் உண்டாகாது என்பது நிச்சயம். இப்படிச் சினைக்குழாயைத் துண்டிப்பது டாக்டருக்குக் கஷ்டமான ஆப்பரேஷன் அன்று. ஆனல் இதை வயிற் றைக் கீறியே இதுவரை செய்து வந்தபடியால் வயிற்றைக்.