பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 - விவாகமானவர்களுக்கு - கூட பூரணமாய்க் கரைந்துவிடுவதில்லை. அவை உண்டாக் கும் நுரை போதுமானதாயும் அதிக நேரம் தங்கியிருப்ப தாயு மில்லை. ஆனல் களிம்புகள் பெண்குறிக்குள் வைத்த உடனேயே நுர்ையை உண்டாக்கி விடுகின்ற்ன. அந்த நுரை பெண்குறியின் மடிப்புகள் எல்லாவற்றிலும் பரவி வெகு நேரம் வரை சுக்கில உயிர்களைக் கொல்லக்கூடிய சக்தி யுடையனவாயிருக்கின்றன. துரை உண்டாக்காத மருந்துகள் கரையக்கூடிய மாத் திரைகளாகவும் களிம்புகளாகவும் செய்யப்படுகின்றன. அந்த மாத்திரைகளில் 1. Wife's friend (மனைவியின் ஸ்,ே கிதை), 2. Lambuts (லாம்பட்ஸ்) என்பவை பேர்போ னவை. களிம்புகளில் (1) Contraceptalene (காண்ட்ராலெப் L-68 Gör), (2) Lactic Acid or Alum Jelly (sorrálo-6, -2, Gröl களிம்பு அல்லது சீனிக்கார களிம்பு), (3) VolPar paste (வால்பர் களிம்பு), (4). G. P. Ointment (ஜி. பி. களிம்பு) முக்கியமானவை. மாத்திரைகளைவிடக் களிம்புகளே உசிதமானவை: (1) மாத்திரைகள் கரைந்து தயாராய் இருப்பதற் காகச் சம்போக ஆரம்பத்துக்குச் சில நிமிஷங்களுக்கு முன்ன தாகவே பெண்குறியில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆல்ை அதிக நேரம் முன்னதாகவே வைத்துக் கொண்டால் அவைகளுடைய சக்தி குன்றிப் போய்விடுகிறது; போது மான நேரத்துக்கு முன்னதாக வைத்துக் கொள்ளாவிட் டால் கரையாமல் இருந்து கருதிய பலன் கைகூடாமல் போய்விடும். ஆனல் களிம்புகளோ எளிதில் இளகாதிருப் பதால் எவ்வளவு நேரத்துக்கு முன்பும் வைத்துக் கொள்ள லாம், அவைகளுடைய சக்தியும் குறைந்து போவதில்லை. (2) மாத்திரைகளை , மணந்து அதிக நாளாகாத பெண்கள் உபயோகிக்கக் கூட்ாது. பெண்குறியிலுள்ள ஆவ்வு கிழிந்து புண்ணுக இருக்குமாதலால் இந்த மாத் .திரைகள் காந்தல் உண்டாக்கிவிடும். அதனால் புண் ஆறின பின்னரே இவைகளை உபயோகிக்கலாம். ஆகவே நுரை உண்டாக்குவனவோ அல்லவோ களிம் புகளே நல்லவை. அவைகளிலும் லாக்டிக் ஆஸிடாவது சீனிக் காரமாவது சேர்ந்தவையே சிறந்தவை. லாக்டிக்