பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 69 குறைந்தாலும் தீமை செய்யும். அதிகப்பட்டால் கர்ப் புத்தை வெளியாக்குவதோடு உதிரத்தையும் கொட்டும்படி செய்து ஆபத்து உண்டாக்கும். குறைந்துவிட்டால் கரு அரைகுறையாகவே வெளியே வரும். அப்படி ஒருபாகம் வராமல் உள்ளே தங்குமானல் உடனே விஷ் முண்டாய் உயிருக்கு உலைவைத்துவிடும். சில பண்டிதர்கள் உள்ளுக்கு மருந்து கொடாமல்சில விஷச் செடிகளை முறித்து கர்ப்பப் பையின் வாயில் திணித்து விடுவார்கள். உடனே கர்ப்பப்பையில் புண் உண்டாகி அதன் காரணமாகக் கர்ப்பப்பை சுருங்கி நெளிந்து கருவை கக்கி விடும், அந்தப் புண் விஷத்தை உண்டாக்கி பல்விதமான அழற்சிகளைப் பிறப்பித்துக் கஷ்டம் தருகின்றது. ஆனல் இதில்விசேஷம் என்னவென்ருல், அந்தப்பெண்கள் அந்தரங் கமாகவே சிகிச்சை செய்து கொள்வதால், என்ன நோய்கள் என்ன கஷ்டங்கள் நேர்ந்தாலும் வெளியே சொல்லப் பயந் தும் வெட்கித்தும் நோய்க்குத் தக்க சிகிச்சை செய்து கொள் ளாமல் நைந்து சாவார்கள். சில பண்டிதர்கள் மெல்லிய இரும்புக் கம்பிகளைக்கூடக் கர்ப்பப்பை வாயில் புகுத்துவார்கள். மற்ற முறைகளில் உண்டாவதைவிட இந்த முறையில் அதிகம்ான அபாயங்கள் உண்டாகின்றன. க்ர்ப்பப் பையில் வைப்பதாகச் சொல்லி அறியாதபடி வேறு உறுப்புகளைத் துளைத்து விடுவார்கள். அப்படி நேர்ந்தால் அநேக பெண்கள் அந்த நிமிஷமே உயிர் துறந்துவிடுவார்கள். மாதவிடாய் நின்றுபோனல், மறுபடியும் உண்டாக்கும் மருந்துகள் என்று பல விளம்பரப் படுத்தப்படுகின்றன. அவைகள் எல்லாம் அநேகமாகப் பேதி மருந்துகளாகவே இருக்கும். கர்ப்புப்பையும் மலக் குட்லும் அடுத்தடுத்து இருப்பதால் பேதி மருந்து மலக் குடலைக் குலுக்கும்போது கர்ப்பப்பையும் குலுங்கிவிடும். அதன் பயனக் கரு வெளியே வந்துவிடக்கூடும். ஆளுல் அந்த மருந்துகள் அப்படிக் கருப் பப்பையை மட்டும் பாதிப்பதில்லை: உடம்பு முழுவதையுமே பாதித்து விடுகின்றன. ஆதலால் அவற்றை உப்யோகிக்கும் பெண்கள் ஆயுள்.பரியந்தம் நோயால் கஷ்டப்பட நேர்ந்து விடுகிறது. வி. ஒ-11