பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - விவாகமானவர்களுக்கு - சொல்வது என்பது இன்னும் மேட்ைடில் அதிகமாகத் தெரியவில்லை. ஆயினும் இந்த நூல் கூறும் இந்தமுறை வைத்தியர்களால் ஆராய வேண்டிய ஒன்றே. "பிருகதயோக தரங்கிணி" என்னும் நூல் கர்ப்பப்பை வாயிலை மூடுவதற்காக இந்துப்புத்துண்டை, நெய்யில் தோய்த்து வைக்குமாறு கூறுகிறது. இந்துப்பு'-சுக்கில உயிர் களைக் கொல்லும். நெய் அவைகளை அசைய வொட்டாமல் செய்யும். அதே மாதிரி பலாசா விதைகளைத் தேனும் நெய்யும் சேர்த்து உருண்டையாகச் செய்து வைத்து கர்ப்பப்பை வாயில்ை அடைக்கலாம் என்று கூறுகிறது. தேன் எவ்வளவு சிறந்த கர்ப்பத்தடைச் சாதனம் என்பதை ஏற்கனவே கண்டோம். எகிப்து கி. மு. 1800-ம் வருஷத்தில் எழுதப்பட்ட காஹத்து பாப்பிரஸ்' என்னும் நூல் கி. பி. 1889-ம் வருஷத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் பல கர்ப்பத்தடை முறைகள் கூறப்பட்டுள. பெண் குறிக்குள் வைப்பதற்குச் சில பிசின் களையும், முதலையின் மலத்தையும் பற்றிக் கூறியபோதிலும், தேனும் சோடா உப்பும் கொண்டு பெண்குறியை நிறைக் குமாறு கூறுவது நல்ல முறையாகவே இருக்கிறது. கி. மு. 1550-ம் வருஷத்தில் எழுதப்பட்டதாகக் கூறப் படும் 'எபர்ஸ் பாப்பிர்ஸ்' என்னும் நூல் கர்ட்பப்பை மூடிகளாகப் பஞ்சையும், கருவேல்மரத் துண்டுகளையும் உபயோகிக்குமாறு சிபார்சு செய்கின்றது. கருவேலம் பிசினும் சாறும் சுக்கில உயிர்களைக் கொல்வதற்கேற்ற லாக்டிக் ஆஸிட் உள்ள பொருள்கள் என்று டாக்டர் ஹயூம்ஸ் கூறுகிருர். அதனலேயே நாம் ஆலும் வேலும் பல்லுக்குறுதி யென்று கருவேலங் குச்சியைப் பல் துலக்க அதிகமாக உபயோகித்து வருகிருேம். இந்த நூலில் கூறியுள்ள முறைகள் எல்லாம் பெண் உபயோகிக்க வேண்டியவை. நம் நாட்டின் தற்கால நிலை மைக்கு ஆண் முறைகளே தேவை என்ருலும் அவைகளை