பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 179 குறியை வெளியே எடுத்து விந்தை வெளியே விடுவதையும் (2)ஆண்குறி மலரில் தார் எண்ணெயைத் தடவிக்கொண்டு புணர்வதையும் (3)பெண்குறிக்குள் யானை லத்தியை வைப்ப தையும் (4) சம்போகம் முடிந்த பின் தும்முவதையும் கூறுகிரு.ர். அலி இபுன் அப்பாஸ் என்பவர் பெண் குறிக்குள் இந்துப் புத் துண்டை வைப்பதையும், ஆண்குறி மலரில் தார் எண் ணெய்யைப் பூசுவதையும் சொல்கிருர். அவிலென்ன என்னும் அறிஞர் (1) கர்ப்பந் தரியாத நாட்களையும். (2)சம்போகம் செய்தபின் பெண் கடுமையான உடற் பயிற்சிகளைச் செய்வதையும் (3) ஆண்குறி மலரில் தார் தடவுவதையும் (4) பெண் குறிக்குள் மாதுளம் பழத் தையும் சீனிக்காரத்தையும் சேர்த்து அரைத்து வைப்ப தையும் கூறுகிருர், ஜப்பான் முதலியன ஜப்பான் ஆண் குறி மலர்க்குக் கொம்பினலோ தோல்ாலோ செய்த மூடிகளை உபயோகித்திருக்கிருர்கள். கோஜோ ஜாட்ஸிவா என்னும் நூலில் கர்ப்பப்பை வாயிலை எண்ணெய் பூசிய கடுதர்சியைப் பந்துபோல் சுருட்டி வைத்து மூடும்ாறு யோசனை கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கால்த்திலும் விப்சாரிகள் அவ்விதமே செய்து வருகிருர் «FA GNTIT ШD . அபீஸினியாவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் விந்தை வெளியே விடும் முறை அனுஷ்டிக்கப்பட்டதாகவும், மத்திய ஆப்பிரிக்காவில் புல்லைக் குறுகத் தரித்துப் பந்துபோல் சுருட்டிப் பெண் குறிக்குள் வைத்துக் கொண்டதாகவும் மெக்ஸிகோவில் கர்ப்பந் தரியாத நாட்களில் சம்போகம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இப்படி எல்லாத் தேசங்களிலும் பழைய காலத்தில் கர்ப்ப்த்தடை முறைகள் தெரிந்திருந்தாலும், இப்பொழுது சில கால்மாகத்தான் அவை அதிகப்பிராபல்யம் அடைந்து வருகின்றன. அதற்குக் காரணம் என்ன?