பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4 - விவாகாமானவர்களுக்கு - எண்ணப்பட்டு வந்தன. ஆல்ை இப்பொழுதோ ஜனங்களின் சகல நன்மைகளையும் கவனித்து அவர்கள்ை முதல் தரமான மக்கள்ாகக் செய்வதேஎன்று எல்லோரும் ஏகமானதாகஒப்புக் கொள்கிருர்கள். அப்படியால்ை மனித ஜாதி இப்பொழுது எந்த நில்ைமையில் இருக்கிறது? அதை உயர்த்தும்வழி யாது? உலகிலுள்ள மக்களில் 90 சதமானவர்கள் மிகுந்த மோ சமான நிலையிலேயே இருப்பதாக ஸர் ஜான் ரீத் என்னும் அறிஞர் கூறியதை முன்னரே கண்டோம். இது எந்த தேசத் தில் என்று கேட்க வேண்டாம் எல்லாத் தேசங்களிலும் இப்படியேதான். நம்முடைய தேசம் பொருட் செல்வத்தி லும் கல்விச் செல்வத்திலும் கடைக்கோடியில் இருப்பதால் உலக மக்கள் ஏணியில் அடிப்படியிலே நின்று கொண்டிருக் கிறது. s இந்த நிலைமையை மாற்றி மனித ஜாதியை உயர்த்து வது எப்படி? உலகில் எந்தக் காரியத்துக்கும் இரண்டு வழி கள் உள; ஒன்று, மிருகவழி; மற்ருென்று மனிதவழி. முன் கூட்டி யோசியாமல், காரியங்கள் நடக்க நடக்க அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுதல் மிருகவழி, முன் கூட்டி யோசித்துத் திட்டம் போட்டு நம் கருத்தை நிறைவேற்றிக் கொள்வது மனிதவழி. சாதாரணமாகச் சகல விஷயங் களிலும் நாம் இதுவரை மிருக வழியையே பின்பற்றி வந் துள்ளோம். இப்பொழுதுதான் எல்லாக் காரியங்களிலும் திட்டம் போட்டு வேலை செய்ய எண்ணி வருகிருேம். ஜன சமூகங்கள் விஷயத்திலும் இப்படியேதான். இது வர்ை மக்களைப் பெறுவதும் வளர்ப்பதும் அந்தக் குருட்டு வழியிலேயே நடத்தி வந்தோம்.-அதல்ை தான் உலகில் இத் துணை அறிவும் ஆற்றலும் பெருகியும், ஜனங்கள் இவ்வளவு கீழான நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிருர்கள். இனி மேலேனும் திட்டம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தால் தான் இதற்கு விமோசனம் தேட முடியும். கீரைத்தண்டு விதை போட்டுப் பயிராக்கினல், முத லில் பாத்தியில் தண்டுகள் அதிக நெருக்கமாகவே உண் டாகும். ஆல்ை இயற்கை அவைகளில் மோசமானவைகளை எல்லாம் வளரவொட்டாமல் அழித்து விடுகின்றது. பல