பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - விவாகமானவர்களுக்கு - இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றும் பிறந்தவுடன் நிறுத்துப் பார்த்தால் 8 ராத்தலுக்கு அதிக மாய்க் காணப்படுகிறது. ஆளுல் நம் நாட்டிலோ பிறந்த வுடன் 8 ராத்தலிருக்கும் குழந்தை அத்திப்பூத்தான். சாதாரணமாய் இந்தியக் குழந்தை 6 ராத்தல்தான்; 7 ராத் தலுக்கு மேல் போவதில்லை. 6 ராத்தல் குழந்தைகள் பிறக்கும்போதே குழந்தைகள் கொழுத்துவிடும், பிரச விக்கக் கஷ்டப்படும் என்று நம் பெண்கள் கூறுகின்ற னரே! இங்கிலாந்தில் போல் 8 ராத்தல் குழந்தைகள் பிறந்தாலோ - இவர்கள் ஒரு குழந்தைகூடப் பிரசவிக்க முடியாது போவார்களோ, என்னவோ? குழந்தைகள் நம் நாட்டில் நிறை குறைந்து பிறப்பது போல், ரோக்யமும் குறைந்தே பிறக்கின்றன. பிறந்த வுடன் றக்கும் குழந்தைகளின் தொகை அதிகம். அதைக் கணக்கிட வேண்டாம். ஆனல் உயிருடன் இருக் கும் குழந்தைகள் ஒரு வாரமாவதற்குள் எத்தனை இறந்து விடுகின்றன ? ஆயிரம் குழந்தைக்ள் பிறந்தால், அவற்றில் நூறுவரை ஒரு வாரம்-ஏழு நாள் உயிர் வாழ்ந்ததும், போதும் என்று யமனுலகு நாடிவிடுகின்றன. உலகில் ஒரு வருஷ வாழ்வு போதும் என்று நீங்கும் குழந்தைகள் ஆயிரத்துக்கு 300 வீதமாகும். இங்கிலாந்து தேசத்திலே பிறந்தவுடன் இறக்கும் சிசுக்கள் அபூர்வம். ஒரு வார மர்வதற்குள் உயிர் துறக் கும் குழந்தைகள் ஒன்றிரண்டே. ஒரு_ வருஷம் ஆவ தற்குள் இறப்பவைக-ட-டாக்டர்கள் எதிர்பார்த்ததைப் பார்க்கிலும்-குறைவு. டாக்டர்கள் 1000-க்கு 75 வீதம் இறக்கும் என்று கூறுவர். ஆனல் அந்த நாட்டில் இறப் பவை 1000-க்கு 58 தான். நாம் குழந்தைகளை ஏராளமாகப் பெறுகின்ருேம் என்பது உண்மைதான். ஆனால் ஏராளமான மக்கள் என்று சந்தோஷப்படக் காரணம் உண்டோ ? இங்கி லாந்தில் 58 வீதம் இறக்க இங்கே 300 வீதம் இறந்தால் அதிகக் குழந்தைகள் பெற்றதால் அடைந்த பலன் யாதோ ? இருப்பதற்காகக் குழந்தைகள் பெறுவதா இறப்பதற்காகக் குழந்தைகள் பெறுவதா ? ஒருவன் வாழைத் தோட்டம் போடுகிருன். 300 வாழைக் கன்றுகள் நடுகிருன். ஆனல் மாதம் ஒன்ரு.