பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - விவாகமானவர்களுக்கு - அதற்குரிய சாதனங்களும் வழிகளும் இவை என்று விளக்கு கிருர்கள். அறிஞர்கள் அரும்பாடுபட்டு அளிக்கும் அந்த உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா ? கலியாணமும் கர்ப்பமும் மக்கட் பேறு மாண்பு மிகுந்த பேறுதான், அதைவிட உயர்ந்த பேறு கிடையாதுதான், அதுவே அளவிறந்த மகிழ்ச்சி தரும் பேறு. ஆனல் அனுபவத்தில் மக்களைப் பெறுவதில் எத்தனைவிதக் கஷ்டங்கள் காண்கிருேம் ? சிறிது சிந்தித்துப்பாருங்கள். நமது நாட்டில் விவாகங்கள் நடை பெறுகின்றன. ஆனல் மணமகனும் மணமகளும் ஒருவ ரோடொருவர் பழகி, ஒருவரை யொருவர் அறிந்து, காதல் கொண்டு, அக் காதல் முதிர்ந்து, அதன் பின் கலியாணம் செய்துகொள்வதில்லை. கலியாணம் செய்தபின்பே காதல் பிற்க்கவேண்டியிருக்கிறது. அதுவும் பிறந்த அன்றே முதிர்ந்த பருவம் அடைந்துவிட் முடியாது. எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், முதிர்ந்து பலனளிக்கும் பருவமடையச் சில காலம் செல்லும், ஆதலால், கலியாணமான பின் பிறக்கும் காதல் வளர்ந்து உரம் பெறக், கனியுதவ ஓரிரண்டு வருஷ காலமேனும் தேவையாகும். அந்தக் காலத்தில் அன்பர் இருவரும் அன்யோன்மாய்ப் பழகப் பழகவே, அவர்களிடை அன்பு தோன்றி வளர்ந்து ஆடிக்காற்றில் அசையாத ஆற்றல் பறும். ஆனல் நடைமுறையில் நாம் காண்பதென்ன ? கலியாணமான மறு மாதமே கர்ப்பம் உண்டாகி விடுகிறது, ஐந்தாவது அல்லது ஏழாவது மாதம் பெண் தன் தாய் வீட்டிற்குப் போய்விடுகிருள். கணவன் வீட்டிலிருக்கும் ஐந்தாறு மாதங்களில், வயிற்றில் சூலுற்றதால் வாந்தி முதலிய கஷ்டங்கள். தம்பதிகள் நெருங்கிப் பழகும் சந்தர்ப் கங்கள் குறைந்துவிடும். தாய் வீடு சென்று குழந்தை பெற்றுத் திரும்புவாளோ, அல்லது திரும்பாமலே போய் விடுவாளோ, யார் அறிவார் ? குழந்தை பெற்று, உடல் உரம் பெறச் சில மாதங்கள் தங்கிப் பின் கணவன் வீடு வருவாள். குழந்தையினிடம் இருவர்க்கும் அதிகப் பிரியம். லுைம் அது இருவரையும் அதிகமாக நெருங்கவிடாமல் டையில் நின்று பிரித்து விடுகின்றது. தம்பதிகள் இரு வரிடையே காதல் முதிர்ந்து, அதன் பயனய்க் குழந்தை பெற்ருல் அந்தக் குழந்தையால் இடையூறு இல்லை. அது