பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 87 வயதானவர்களும் பலம் குன்றியவர்களும் இயற்கை யாகவே காம யிச்சை குறைவாக உள்ளவர்களும் இதைக் கையாளலாம். அவர்களுக்கு இது நன்மையே பயக்கும். சில பெண்கள் அதிக ஆசையுடையவர்களாகவும் அவர்களுடைய கணவர்கள் பலவீனர்களாயு மிருந்தால் அவர்கள் இந்த முறையை அனுஷ்டித்தால் கணவனுடைய தேகசுகம் குன்றி விடாமல் இருப்பதற்கு உதவியா யிருக்கும். தேக பலம் உள்ளவர்களுங்கூட எப்பொழுதுமே விந்தை வெளியாக்கிக் கொண்டிராமல் அநேக தடவைகளில் விந்து வெளியாகத இந்த முறையைக் கையாண்டு பலன் பெறலாம். ஆலுைம் இந்த முறை கர்ப்பத் தடை முறையாகுமா என்பது சந்தேகம் தான். விந்து வெளியாகமல் ஒரு மணி நேரம் வரை ஆண்குறியைப் பெண்குறிக்குள் வைத்துக் கொண்டிருப்பது என்பது மிகக் கஷ்டமான காரியம். என் றேனும் அடக்க முடியாமல் போகுமானல் எண்ணிய கர்ப் பத்தடை ஏற்படாமல் போய்விடும். அப்படியே அடக்கிக் கொண்டிருக்க முடிந்தாலும், ஆண்குறி நட்டமாக எழுந்தவுடன், அதை வழவழப்பாக்க ஊறும் நீரிலேயே சுக்கில உயிர்கள் சிலவேனும் கலந்து வரக் கூடும் என்பதை முந்தின முறையைப்பற்றி ஆராய்ந்த ப்ொழுது கண்டோம். அதே மாதிரி-இந்த முறையிலும் நிகழக் கூடுமல்லவா? அப்படியால்ை இந்த முறை கர்ப்பத் தண்ட முன்ற யாவது எப்படி? ஆதலால் இதை அனுஷ்டிக்க முடிந்தவர்கள் வேறு காரணங்களுக்காக அனுஷ்டித்துக் கொள்ளலாமே யன்றி கர்ப்பத் தடைக்காக அனுஷ்டித்தல் கூடாது என்பது தெளிவாகும். மூத்திரப் பைக்கு மாற்றும் சம்போகம் கர்ப்பத்தைத் தடுக்கும்பொருட்டு வேறு ஒருவிதமான சம்போகம் அநேக தேசங்களில் கையாளப்படுகிறது. ஆணுக்கு மூத்திரப் பையிலிருந்து வெளியே போகும். மூத்தி ரத்துக்கும் விந்துப் பைகளிலிருந்து வெளியே போகும் விந்துக்கும் ஆண்குறியின் நடுவிலிலுள்ள ஒரே குழாய்தான்.