பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 -, விவாகமானவர்களுக்கு = இந்த முறைகளுக்குப் பணங் காசும் தேவையில்லை. வேறு கருவிகளும் தேவையில்லை. ஆனல் தோப்புக்கரணம் போடவும் எழுந்து உட்கார்ந்து இருமவும் தும்மவும் அதுவா நேரம் ? அமைதியாய்த் துரங்க வேண்டிய நேரத்தில் அவ்வித ஆர்ப்பாட்டங்கள் சரியானவையா? ஆளுல் அப்படி உடனே எழுந்து நடந்து கொள்ளாமல் அர்ை நிமிஷம் தாமதித்தாலும் அதற்குள் விந்து உள்ளே சென்றுவிடும். அதன்பின் என்ன பயிற்சிகள் செய்தாலும் அது வெளிவராது. அவ்விதமே உடனே எழுந்து காரியம் செய்தாலும் கர்ப் பத்தடை சித்திப்பது சந்தேகமே. சில சமயங்களில் ஆண் குறியும் கர்ப்பப் பை வாசலும் ஒரே குழாய்போல் இருந்து விடும் என்றும், அப்பொழுது வெளியாகும் விந்து நேரே கர்ப்பப் பைக்குள்ளேயே பாய்ந்துவிடும் என்றும் முன்ன லேயே கண்டோம. அதுபோலவே சில சமயங்களில் கர்ப்பப் பையானது விந்தை நேரே உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் என்றும் கண்டோம். இந்த விதமாகக் கர்ப்பப் பைக்குள் செல்லும் விந்தை எந்தவிதமான பயிற்சியும் வெளியாக்க முடியாது. இது மட்டு மன்று. சம்போக ஆரம்பத்தில் சுரக்கும் நீருடன் கலந்து வரும் சுக்கில உயிர்கள் விந்து வெளியாகும் முன்பே கர்ப்பப் பைக்குள் சென்ருலும் சென்றுவிடும். அத்துடன், பலவிதமாக முயன்று விந்தை வெளியாக் கிலுைம் விந்து முழுவதும் ஒரு துளிகூடப் பாக்கியில்லாமல் வெளியாய் விடும் என்று நிச்சயம் கூற முடியாது. ஒரு துளி தங்கினாலும் போதாதோ கர்ப்பம் உண்டாவதற்கு ? இத் தகைய காரணங்களால் இந்த முறைகளும் கர்ப்பத் தடைக்கு உகந்தனவல்ல. டுஷ் கொண்டு கழுவுதல் விந்தை வெளியாக்குவதற்கு இப்படிக் கஷ்டமான காரியங் களைச் செய்வதைவிட விந்து வெளியானதும்பெண்ணுனவள் எழுந்திருந்து தாமதம் சிறிது கூடச்செய்யாமல் பெண்குறித் துவாரத்தை நன்ருய்க் கழுவி விட்டால் போதுமே என்று சிலர் எண்ணுகிருர்கள்.