பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அலையகம் வெளியீடு-7 முதற்பதிப்பு-மார்ச், 1950.

வாழ்வுப் பிரச்னை

வாழ்க்கையில் அடிபடும் பல பிரச்னைகளை யும் ஆராய்ந்து, யோசனை கூறும் சிறு புத்த கங்கள் எழுதித் தரும்படி கேட்டார் எனது அருமை நண்பர் எம். சூரி அவர்கள். இவ் விதம் சிறு நூல்கள் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. எங்கள் எண்னத்தின் மலர்ச்சி தான் இந்தப் புதிய வரிசை. வாழ்வின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் சிந்தித்து தான் அவ்வப்போது குறிப்புகள் எழுதி வைத்ததுண்டு. உலக இலக்கியங்கள், அறிஞர்களது ஆரா ய்ச்சி நூல்கள் முதலிய சிந்தனைச் சுரங்கங்களையும் ஆராய்ந்து உண்மைகளை உணர உழைக்கும் வேளையிலேயே, நான் கண்ட கருத்துக்களை மனோதத்துவ ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் தொகுத்துக் கொடுக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அம் முயற்சியின் விளைவு தான் இம் முதல் புத்தகம். இந்த வரிசையிலே இன்னும் பல புத்தகங்கள் வர வேண்டும். அவற்றை நீங்கள் ரசித்து மகிழ் வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வணக்கம்,

வல்லிக்கண்ணன்.

முத்துக்குமரன் அச்சகம், சென்னை-1 20.1-50.