பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பல்லக்கில் கொண்டு போய்த் தானிறக்கி இந்தப் பார் மன்னன் தன்னையடக்கஞ் செய்தார். அப்போது கும்பினி யார்கதை நானுமே செப்புறேன் கேளுங்கள் நல்லோரே 4 240 தப்பாமலக்கினி மேசர் தனக்குமே சந்தொட்டியாகி மன மகிழ்ந்து சர்க்கரை எங்கும் வழங்கினர்கள் படை முக்கியமாக மன மகிழ்ந்தார். அக்கினி மேசர் பட்டாளங்கள் தன்னையும் முக்கியமாக அணிவகுத்து திக்குவிசயன் ஊமைத்துரைப் பாண்டியனே செம்பொன் சிவிகையில் தானடைத்தான். பக்குவம் சொல்லுஞ் சிவத்தையா முத்தையா பாஞ்சைப் பதி மன்னர் தங்களையும் 委盛荡0 வல்லமைக்காரர் அனைவரையும் ஒரு பல்லக்கிலே வைத்து தானடைத்தான் கயத்தாறு விட்டு வெளியேறிப் படை கட்டுமெட்டாகவே அக்கினிசும் பயத்துடனந்தப் பாஞ்சைத் துரைகளைப் பாளையங் கோட்டைக்குக் கொண்டு வந்து பாராளு மன்னவர் தங்களையும் அந்தப் பாளையங் கோட்டை துரை முன்னே விட்டான். ஈரேழு லோகமுந் தானறிய அந்த ஏத்த ஜெயில் துரை ஏது சொல்வான். 丝忍6G பாஞ்சைப் பதிதுரை தங்களையும் இங்கே பந்துக்கான் கூடத்தில் தானும் வைத்தான். வாஞ்சையதாகவே அக்கினிசு துரை வந்து ஜெயிலர் துரையிடத்தில் மெட்டாகத்தானும் சலாமுஞ் சொல்லி நானும் பட்டணம் போறேனென உரைத்தான். பட்டாளந்தன்னை எழுப்பிக் கொண்டு சென்ன பட்டணம் சென்ருனே அக்கினtசு. நன்னயமாகக் கெவுனரையுங் கண்டு நடந்த செய்தி மகிழ்ந்து சொல்வான். 玺忍7{} சென்னல் துரையும் கெவுர் மெண்டார்களும் சீமையும் கைவச மாச்சு தென்ருர், கும்பி னிக்காயிதம் வெற்றியென்று வெகு சம்ரதாய மாகத் தானிருந்தார்.