பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 வக்கைய நாயக்கர் முக்கியமதாகவே வாரித்தலையைப் பொதிபிடித்து திக்கோர்புகழ்ந்திட முன்னூறு நானூறு சுமையதாகப் பொதி பிடித்து நாட்டிலுள்ள பொதிமாட்டுக் காரர்களே கூட்டியே வந்து பொதிஏத்தி தேட்டிலுயர் சென்ன பட்டணத்துத்திசை நோக்கியே அங்கே நடத்தினர்கள். 7000 நடத்திய மாட்டுப் பொதிகளையுமிந்த நாடுகடந்து வ்ெகுதுாரம் அடத்துடன் வக்கையன்தானுமே கூடவே அஞ்சாமல் போகிருன் சிங்கேறு மாடகட மிகுந்த தென்மதுராநகர் வைகைக்கரையருகாக வந்து கூடல் நகருக்கருகாகவே தானங்கே கொண்டுபோய் மாட்டுப் பொதிகளையும் 70 1 0 மாட்டுப் பொதிகளைத்தானி றக்கியந்த மன்னவன் வக்கைய சேருவையும் கூட்டமதாகவே சமையல்செய்து அங்கே கொற்றவருண்டு பசியாறி நாட்டிலுயர் சென்னபட்டணத்துப்பாதை நாடிநடந்தார் வழிகூடி தீட்டுபுகழ் ஊமைத்துரையுட சேவுகன்வக்கையன் தானுமங்கே பத்திரமாகப் பொதி எடுத்துச்சென்ன பட்டணஞ்சேர அனுப்பிவைத்தான் 7020 மத்தியான வெயில் நேரத்திலேபொதி வந்ததே சென்னல் புரந்தனிலே வந்தபொதிகளைத்தான் பார்த்து அந்த வாசலதிகாரி என்னவென்று சந்தித்துக் கேட்கும்போதிலே தானப்போ சொந்தமா வியாபாரி சொல்வான் ஆங்காணும்பொல்லாங்கு ஒன்றுமில்லை சாமி நாங்கள்தான் போரோம் யாபாரிஎன்ருன் நல்லதென்ருன் அதிகாரி பொதி ரவளுக் கொண்டாடா பாவிஎன்ருன் 70.30 சொல்லும்பொழுதிலே யந்நேரம் வெகு துரிசாய் தேங்காய்ப்பொதிதனக்கு