பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 اس پيلم மன்னன் கொலு பொம்மக்காள் கோவிலின் முன்பாகக் கட்ட பொம்முதுரையும் பேரன்பாக 100 கம்மவார் சில்லவார் தோக்குலவார் நல்ல கம்பளத்தாருங் கொலுவிருக்க நித்யகல்யாணி மேடையிலே நவரத்ன நாற்காலி தான்போட்டு சித்ர விஸ்தாரமாய் மெத்தை விரித்ததில் திண்டுவைத்து முல்லைச் செண்டுவைத்து வாசம் பொருந்தவே கட்டபொம்மு துரை ராசன் மகிழ்ந்து கொலுவிருக்க ஊமைத்துரையுஞ் சிவத்தையா முத்தையா வீமன் கருத்தய்யா வெள்ளைய்யாவும் சாமித்துரையான வேடப்பட்டித்துரைச் சாமியும் வந்து கொலுவிருக்க சின்னத்தளவாய் பெரிய தளவாயும் மன்னன் புலிகுத்தி நாயக்கரும் 1 10 வர்ணப்பணிகள் துலங்கிடவே நல்ல மாப்பிள்ளை நாய்க்கமார் வந்திருக்க தேசம் புகழுஞ் செகவீரபாண்டியன் செல்வன்கட்டபொம்மு ராச துரை ராசதுரை வாசல் தானுபதியான நல்லசிவ சுப்ரமண்யபிள்ளை கங்கைக் குலாதிபன் மங்களக் கல்யாண துங்கன் அதிகாரம் பார்த்திருக்க. சிங்கார மாகவே பாஞ்சால நாட்டினில் சங்கீத மேளந்தயாராக - பேரிகைச் சத்த முழங்கிடவே சங்கு பேசுந் தொனியு முழங்கிடவே | 20 காரியக் காரர்கள் காணிக்கரும் நல்ல கம்பளச் சேருவைக் காரர்களும் கெம்பீரமாகச் சபை கூடிச் சேவல் கட்டிவிட்டங்கே விளையாடி சேயிழை மாதர் செயம் பாட ஒயில்" செல்வக் குமாரர் விளையாட வாய்பேசாப் பாண்டியன் 'ஊமைத்துரைச்சாமி ஞாயம் விசாரணை தான் கேட்க