பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாஞ்சால நாட்டுத் துரை மார்கள் நல்ல பார்வைக் கேற்ற ஒயில்க் காரர் 夏3G பூஞ்சிட்டுத் துப்பட்டா மேல் போட்டு ராச போச மகாராசன் சீராட்டு வட்டப் பொட்டுக்காரன் மைக்காரன் வில்காரன் வாகுள்ள வெள்ளையன் சீராட்டு திட்டங்களாகவே கட்டபொம்மு துரை செய்தியைக் கேளுங்கள் நல்லோரே மாப்பிள்ளை மார் போல வருவதுவும் சப்ர மஞ்சத்தில் மெத்தை விரிப்பதுவும் ஆயி மனேன்மணி சக்கதேவி பொம்மு அம்மன் பூசை தின முடிப்பதுவும் 140 ஞாயம் விசாரணை கேட்பதுவும் அந்த ஞாயம் பைசல் பண்ணித் தீர்ப்பதுவும் ஏழை பரதேசிக் கன்னங் கொடுப்பதுவும் இந்திரன் போல் கொலு விருப்பதுவும் பாளையக்காரர் பவிசுக்காரர் வீரபாண்டியர் பாஞ்சைப் பதிராசர் இப்படியாகத் துரைத்தனஞ் செய்து கொண் டேயிருந்தார் கட்டபொம்முதுரை - பாஞ்சைக்குக் கேடு வரக் காரணம் அப்படிக் கொத்த பாஞ்சை நகருக்கு அழிவு வந்ததைக் கேளுமையா 150 வந்த விதிகளைச் சொல்லுகிறேன் அந்த மார்க்கத்தைக் கேளுங்கள் நல்லோரே தந்திரமாயிந்தச் சீமையோ ரெட்டுக்குஞ் சாகிஷன் மேஷர் கலைக்கட்டராய்' சென்ன பட்டணம் கெவர்மெண்டார் துரை செப்பிய உத்திரவின் படியாய் யென்னராஞ் சாகிஷன் மேஷர் துரை வலு இங்கிலீசுத்துரை கெங்கு துரை வந்தானே ராமநாத புரத்தில் துரை வல்லமை சொல்லக் கேளும் நல்லோரே 160 சிந்தை மகிழ்ந்தல்லோ சாகிஷன் மேஷரும் சீமைக் கதிகாரம் பார்த்தனனும் எட்டயபுரம் பிரதானி வந்து துரை யிடத்தில் என்ன பிராது " சொல்வார்