பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ராசிகளாக வரவழைத்தான் கெட்ட ஞாயங்கள் பேசி மடிபிடித்தான். பொல்லாங்கு மெத்தவே செய்யலுற்ருன்கட்ட பொம்முதுரையை மடிபிடித்தான் வல்லமை யாகவே சாகிஷன் மேஷரும் மானபங்கஞ் செய்தா னென்றுரைத்தார் கம்பளத் தாரைப்பிடித்த தினுலங்கே கலகம் நடந்தது ஞாயமென்ருன் 互750 அன்பாகப்பிள்ளை மகனுரைக்க ஏழு ஆலோசினைத் துரை "தான் கேட்டு நடந்தசெய்திக் கெழுதாமல் கெவுணர் ஞாயத் தாருத்தரவில்லாமல் அடங்கள் செய்தானே சாக்ஷன் மேஷரும் அந்நியாய மாகவே சீமையிலே ஜாக்சனுக்குத் தண்டனை வருமங்கள் செய்தவன் சாகிஷன் மேசருக்கு வாவல் அபராதங் குறியு மென்ருன் தருமத்துரைகளும் ஞாயங்கள் பார்த்தங்கே சாகிஷன் மேசர் மேல் குற்றமென்ருர். 1760 அந்தச்சணமே கெவுணர் துரைகளும் ஆலோசனை செய்து அந்நேரம் சந்தனந் தாம்பூலந் தானெடுத்து அந்தத் தானுபதி கையில்தான் கொடுத்து சற்சித்துரைகள் மனமகிழ்ந்து பிர தானி முகம் பார்த்து யேது சொல்வார் கவர்னர் துரையின் வேண்டுகோள் இச்சணம் உம்மிட கட்டபொம்மேந்திரனை இஷ்டமாயிங்கே வர வழைத்தால் சட்டமாய்ப் பேட்டிகள் கண்டிடலாம் வெகு சந்தொட்டியாய் மொழி பேசிடலாம் 1770 எட்டு நாளைக்குள் தருவியென்று வெகு - திட்டமாய்த் துரைகள் செப்பிடவே நல்லதென்று சொல்லிப் பிள்ளை மகன் வெகு உல்லாசமாகவே தான் திரும்பி