பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*بسم. 75 "عينة ي நவுரிப் " பேரிகைதான் முழங்க மகா ராசன் சிவிகையின் மேலேறி ஊமத்துரை ஒரு சேகரமாய் வெகு சேமத்துடனே தான் கெற்சிதமாய் 1810 பூமான் சிவத்தையா முத்தையா வெள்ளையா பொதிந்து கம்பளஞ் சேர்ந்து வர வில்லுங் கைவங்கியு மண்டாவும் ஈட்டி மிகுந்த கத்தியும் பட்டாவும் வல்லமையாகவே தானெடுத்து வெகு சொல்லுறுதிக் கார ரெல்லோரும் சிங்கேறு போல வெளியேறி நின்ருரங்கே சென்னல் நகரம் போய்ச் சேர்வோ மென்ருர் கட்டபொம்மு சென்னைக்குப் புறப்பட்டார் வங்களர் சிங்களர் கொங்கர் புகழ்ந்திடும் வல்லவன் கட்டபொம்மேந்திர துரை 1820 தங்கமிலங்கிய பொன் கண்டிகை யேறித் தாஷ்டிகன் வாரதைப் பாருமையா சங்கீத மேள முழங்கிடவே துரை தம்பியும் ஊமைத்துரை தானும் எங்கும் வலம்புரி சங்கு முழங்கிட சிங்காரமாகவே தானடந்தார் மாற்றலர் போற்றுஞ் செகவீர பாண்டியன் மன்னன் தானுபதி தன்னுடனே கூற்றை யுதைத்தவன் தன்னருளால் வழி கூடி நடந்தார்க ளெல்லோரும் 1830 தேசம் புகழுந் தென் பாஞ்சைப் பதிதுரை சென்னல் நகரம் போய்ச் சேரவென்று நேசமதாகவே சேனை படைகளும் நில்லாம லன்னேரமே நடந்தார் மாட கூட மணி மேடைகளாம் புது மண்டபஞ் சேர்வையை மானதியாம் நாடெல்லாம் போற்றிய தென் மதுராபுரி நாடிவந்தார் கட்டபொம்முதுரை மதுரை நகர்தனில் போய்ச் சேர்ந்த துரை மன்னவன் கர்னலைப் பேட்டி செய்து 1840