404 வி ர ப ா ண் டி ய ம் சாகப் போகிற நேரம் தனது தம்பி ஊமைத்துரை யை மாத்திரம் நினேந்து சில கவலைகளே அடைந்தார்: தனக்குத் துரக்கு இட்டிருந்த அந்தப் புளிய மரத்தின் அடியை அடைந்தவுடன் சிறிது கின்று மறுகினர்; தன் னுடைய கோட்டையைவிட்டு வெளி ஏருமல் அங்கேயே கின்று உரிமையைப் பாதுகாத்து எதிரிகளே எதிர்த்துப் போராடி மாண்டு போயிருந்தால் தனக்கு மிக நன்ரு யிருந்திருக்கும்! என்று நீ ண் ட பரிதாபத்தோடு மொழிந்து அதன் பின் மாண்டு போனர்." இந்த வீரனுடைய தீர தைரியங்களைக் குறித்து எதிரியும் இவ்வாறு வியந்து எழுதியிருக்கின்ருன். மரணம் என் ருல் எவரும் கலங்குவர். யாதும் கலங் காமல் ஏதும் தளராமல் இவ்வீரன் உறுதி ஊக்கங் களோடு சென்றிருப்பது யாருக்கும் அதிசயவியப்பாப் கின்றது. பகைவனும் பரிந்து கூற நேர்ந்தான். Undaunted: He walked with a firm and daring air: என்னும் இந்த ஆங்கில வாசகத்தின் பொருட் குறிப்புக:ை இங்கே கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். யாவரும் மறுகினர். 2175 ஆவி போனபின் அத்திரு மேனியை அங்கே கூவி நின்றதன் உறவினர் கொண்டுபோய்க் கோலம் யாவும் செய்தனர் அரசியல் அமைதியில் அழகாய் மேவு சந்தன. இந்தன. மேலினி துய்த்தார். (76.3 வீரப்பொலிவு. 217.6 சிங்கம் சிறிய செயலெனச் சினத்தொடு வீரம் பொங்கி நின்ருெளிர் திருமுகப் பொலிவினை நோக்கி அங்கண் ஞாலத்தில் ஆண்மையை விளக்கிய அரசை எங்கு நாமினிக் காண்பமென் றேங்கினர் இரைந்தே. ஏங்கி கொந்தனர். 2177 பாங்கு சூழ்ந்துகின் றுளமிகப் பரிந்தவர் பலரும் ஈங்கிம் மன்னனுக் கிவ்விதி எய்திய தந்தோ!