பக்கம்:வீர காவியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

மகப்பெறு படலம்




இயல் 45
நாவலத்தான் படையெடுத்த செய்தி கேட்டு
மூவகத்து மாவேழன் கொதித்தெ ழுந்தான்.
| நாவலத்துப் பெருங்கனகன் பகைமை பூண்டு
|நட்புரிமை விட்டொழித்துச் செருக்குக் கொண்டு மூவகத்துட் பெரும்படையை ஏவி விட்டான்;
முனைத்தெழுந்து படையெடுத்து மதலைக் கோவும் காவலுக்குப் புறப்பட்டான் என்ற செய்தி
களிறடக்கும் மாவேழன் செவியிற் கேட்டான்; போவதற்குக் கொதித்தெழுந்தான் முகஞ்சி வந்தான்
பூரித்த தோள் தட்டி ஆர்ப்ப ரித்தான். 197
ஆர்ப்பரித்த ஒலிகேட்டு நங்கை வந்தாள்:
'ஆயிழையே! நானில்லாப் பொழுத றிந்து போர்ப்படையை நாவலத்தான் எனது நாட்டிற்
புகுத்தியுளான் எனுஞ்செய்தி இன்று கேட்டேன்; தேர்ப்படையால் வாட்படையால் எதிர்த்தா னேனும் செருக்கடக்கிப் படைமடக்கிப் பிறக்கிட் டோடத் தார்ப்புரவி செலுத்திப்போர் வென்று மீள்வேன்;
தரியலரைச் சிதறடித்துக் கொன்று மீள்வேன்'. 198
பிறக்கிடல் - முதுகுகாட்டல் தார்-முன்னணிப்ப.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/106&oldid=911166" இலிருந்து மீள்விக்கப்பட்டது