பக்கம்:வீர காவியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

மகப்பெறு படலம்




மறக்குலத்து மாமகளே! உலக வீரன்
மாவேழன் மனைவிஎனில் கலக்கம் கொள்ளேல்; திறற்களத்து வென்றிபெற வாகை சூடச்
சிரித்த முகங் கொண் டென் ஜன. வழிய னுப்'பென் றுரக்களிற்றின் மிகுவலியன் விறைத்து நின்ருன்;
உள்ளத்துள் இசையாளாய் இருந்த போதும் மறுப்புரைக்க இயலாமல் சிரித்து நின்ருள்;
மாவேழன் அவள் கன்னம் சிவக்கச் செய்தான். 205
'கண் திறந்து விடைதந்தாய், நின்றன் கொவ்வைக்
கணிதிறந்து மனந்திறந்து தந்தா யல்லை;
மண் பிறந்த காலத்தே வாய்த்த வீரம் -
மாற்றலர்க்குக் காடடுதற்கே செல்லு கின்றேன்;
பெண் பிறந்தால் இவ்வணியைக் கழுத்திற் கட்டு:
பெறுமகவு மகளுளுல் கையிற் கட்டு;
கண்பொழுதுங் களையாமல் அணிந்தி ருப்பின்
காளையவன் பெருவலியும் புகழுங் கொள்வான். 206
நயந்துரைகள் இவ்வண்ணம் பலவுங் கூறி,
நாட்படுமோர் பொன்னணியை அவட்க ளித்து, வயந்தநகர் வீரர் சிலர் கவர்ந்து சென்று
வயத்தரசன் ஆணையினுல் மீண்டும் தந்த வயங்கெழு.மு கடுநடைய பரிமா வேறி
வாள்வீரன் தன் திசையிற் பறந்து சென்ருன்; மயங்கியவள் கட்புலனுக் கெட்டுங் காறும்
மாவேழன் செலுந்திசையை நோக்கி நின் ருள். 207
கண் பொழுது-இமைப்.ெ ாழுது, வயம்-வெற்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/110&oldid=911177" இலிருந்து மீள்விக்கப்பட்டது