133
மகப்பெறு படலம்
இயல் 57
பரியினைப் பெற்ற அச் சிறியவன் விரைந்து பொருபடை திாட்டிப் போர்செய முனைந்தனன்.
ஆடிக்குள் காண்பார்தம் தோற்ற மெல்லாம்
அவ்வாறே தோன்றுதல்போல் தந்தை சாயல், நீடிக்கும் பெருவீரம், செய்கை, பண்பு
நினைவெல்லாம் அப்படியே ஒக்கின் ருனல்; தேடிக்கண் டின்புறவே தந்தை யின்பால்
செலநினைந்தான்; இவனை இனித் தடுப்ப தென்ருல் மூடிக்குள் பெரும்புயலை அடக்கல் போலாம்;
முயல்கஅவன் வெல்கவென மகிழ்ந்து நின்ருள். 268
பணியாளன் ஒருவனைக்கூய்த் தேர்ந்தெ டுத்த
பரிபலவுங் கொணர்கவென ஆணை யிட்டாள்; அணியாக வந்தவற்றுள் ஒன்றும் இந்த
அடலேற்றுக் கொப்பவிலை; மற்ருேர் வீரன் மணியான பாய்மாவொன் றங்குத் தந்து "மாவேழன் புரவிக்குப் பிறந்த தாகும்; இணையாக இதற்கொன்றும் இல்லை' என்ருன்;
ஏறனையான் மகிழ்ந்ததன்மேல் ஏறிக் கொண்டான்.269
ஆடி-க ண் குடி கூய்-அழைத்து. அடலேறு-வெற்றிக்காளை போன்ற கோாரி. t =