பக்கம்:வீர காவியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

மகப்பெறு படலம்


இயல் 7 1 மானத்தி நினைவதனுல் வாடு வோனே மாவலியன் இடித்துரைத்து மறக்கச் சொன்னு ன். விடையெதுவும் துயருறுவோன் தாரா னேனும் விழைந்ததனைப் பளிங்கேபோல் எடுத்துக் காட்டும் விடையனையன் முகத்துறுப்பால் கண்டு கொண்டான்; வீரநினக் கொன்றுரைக்கக் கடவன் கேண்மோ! கடைவிழியிற் கட்டுறுத்தும் மகளிர் கொண்ட கட்டழகும் பற்றுளமும், இன்று பூத்து நடைமுறையில் இதழ்விரித்து நாளை வாடும் நலமுடைய மலரனைய இயல்பே கொள்ளும். 322 பேர்விழைவோர் காதலெனும் மலருள் மூழ்கிப் பொன்றி விழும் வண்டாகார்; போரில் வெற்றித் தார் விழையும் நினைவுடன்தான் ஈங்கு வந்தோம்; தையலரால் கடன்மறந்து திரிதல் நன்ருே? கார் விழையும் கூந்தலுக்கு மயங்கி நின்ருேர் கடும்போரை வென்றதிலே; உண்மை வீரர் வர் விழையும் காமமெனும் வலையிற் சிக்கி இடருக்குள் தாமேபோய் வீழ்ந்து சாகார். 3 23

  • - 'My j
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/164&oldid=911292" இலிருந்து மீள்விக்கப்பட்டது