பக்கம்:வீர காவியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

164


இயல் 73 வெண் கோட்டை நகர்த்தலைவன் விட்ட ஒ&ல

  • * * - + * * = - # * -- - விரித்தொருவன் படித்திருக்க மன்னன் கேட்டான்.

வெண்கோட்டைக் கஞ்சுகத்து மறவன் வந்து வேத்தவையில் மதலைக்கோ தாள்ப ணிந்து மண் போற்றும் மானத்தி தந்தை தந்த வரைமுடங்கல் தந்திருக்க, வேந்தன் அங்குக் கண்காட்ட அதுபெற்ற ஓலை நாய்கன் காவலன்முன் அவையத்துப் படிக்க லுற்ருன்; பண்போற்றும் புகழ்வேந்தே! வணக்கம்; உண்மை பகர்கின்றேன் சினவாமல் செவிதந் தாய்க! 328 துளியேனும் அச்சமிலாச் சிறிய வீரன் தோற்றத்தில் அரியேற்றை நிகர்க்கும் செம்மல் விளிவேதும் அறியாத படைதி ரட்டி வெண்கோட்டை பற்றுதற்கு முற்றி யுள்ளான்; அளிவாழும் மலர் மாலைக் கனகன் தந்த அணிவகுத்த பெரும்படையும் துணையாக் கொண்டான்; எளியேனைப் பொறுத்தருள்க! ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கின்றேன் துணையே யின்றி. 329 முடங்கல்-ஓலே. ஒஃப் தாய்கள் -அரசனுடைய கடிதப்போக்கு வரத்து அதிகாரி விளிவு-அழிவு. அளி-வண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/167&oldid=911298" இலிருந்து மீள்விக்கப்பட்டது