வீரகாவியம்
166
இயல் 74
வேழ?ன அழைத்து விரைவினில் வருகென ஆளி:ன மன்னன் அனுப்பினன் துடித்தே.
முடங்கல் தரும் செய்தி எலாம் படிக்கக் கேட்டு
முனிந்தெழுந்த மதலைக்கோ, எதிர்த்து வந்த அடங்கலரை ஒழிப்பதினி எவ்வா றென்றே
அமைச்சர் படைத் தலைவரையும் வினவி நின்ருன்: 'மடங்கலினை நிகர்ப்பானை அடக்க வேண்டின் மாவேழன் ஒருவன்தான் தக்கான் என்ருர்; தடங்கலின்றி வலிமைமிகு வேழன் இன்று
தண்டலத்தில் உறைகின்ருன்' என்று சொன்னர். 332
மாமன்னன் தூதுவரை விரைந்து கூவி
மாவேழற் கொணர்களனப் பணித்து நின்று, கோமன்னன் நாவலத்தான் போர் தொ டுத்தான்;
குமரைெரு சிறுமகனே தலைமை பூண்டான்; நாமன்னும் வெண்கோட்டை பற்றிக் கொண்டான்; நல்வலிமைக் கோடனையும் சிறையில் வைத்தான்; ஏமன் னும் வில்லானுக் கெல்லாம் சொல்லி
இப்பொழுதே கொணர்கவென ஏவி விட்டான். 333
--
அடங்கலர் - பகைவர். மடங்கல் - சிங்கம். தண்டல ம் - வே ழன்