பக்கம்:வீர காவியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

170


இயல் 77 சிறுவன் அவனெனச் சிந்தையின் இகழ்ந்தோன் உறுபகல் நான்கு விருந்தயர்ந் தேகினன். 'தென் புறத்து மூவகத்தைச் சிறிதென் றெண்ணிச் சிறுமகனே தாக்குதற்குச் சீறி வந்தான்? வன்புயத்து மாவேழன் வயமா வீரன் வாழ்கின்றேன் எனும் நினைவை மறந்தான் போலும்! முன்பெடுத்த போரிலெலாம் முதுகு காட்டி மூச்செறியத் தோற்ருேடிச் சென்றி ருந்தும் பின்பெதற்குச் சிறியவனை அனுப்பு கின்ருன்? பெருங்கனகன் ஆட்சிக்கு முடிவு போலும்! 341 எனப்பலவும் தன்னுளத்து நினைந்த வேழன் இயம்பவரும் துாதுவனை இனிது நோக்கி, 'மனக்கவலை விட்டொழிக! போர்தொ டுத்த மைந்தைெரு சிறுவனென மொழியா நின்ருய்; தனக்கெனவோர் வலியில்லா வேந்தன் இந்தத் தகையறியாச் சிறுவனுக்கோ எனைய ழைத்தான்? நினைத்தெழின் நான் செருக்கடக்கி அவனை வீழ்த்த நெடும்பொழுத வேண்டும்?நொடிப்பொழுதே போதும்! . . / ! { *!--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/173&oldid=911312" இலிருந்து மீள்விக்கப்பட்டது