பக்கம்:வீர காவியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

மகப்பெறு படலம்


விருந்துண் டு களிப்போம்வா! இவனை மோதி விளையாட்டாக் கொல்வ னென எண்மை யாகப் பருந்தனைய நோக்குடையான் பகர்ந்தி ருந்தான்; பரியேறி வந்தமகன் வருந்திச் சொல்வான், பொருந்தொழிலோய்! விருந்துண்ணும் நேரம் அன்று! போர்தொடங்கும் முன்பாக விரைதல் வேண்டும்; நிறைந்தபுனல் வருமுன்பே அணைகள் கோலி நிறுத்துவதே கடனுகும்' என்ருன் வீரன். 343 ஒல்லையில் நாம் செல்வமென உரைத்த மாற்றம் ஒன்றேனும் அவன் செவியிற் புகுத வில்லை; எல்லையிலாக் களிப்புடனே ஆடிப் பாடி எக்களிப்பு மீதுார விருந்த யர்ந்தான்; எல்லனையான் ஈரிருநாள் கழிந்த பின்றை இனிதெழுந்து போர்க்கோலம் பூண்டு நின்று வல்லியம்போல் மறவர்புடை சூழ வந்தான் மாமன்னன் மதலைக்கோ நகரை நோக்கி. 344 எண்மை-எளிது. கோலி-கட்டி, ஒல்லையில்-விரைவில், எல்-குரியன் வல்லியம்-புலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/174&oldid=911314" இலிருந்து மீள்விக்கப்பட்டது