பக்கம்:வீர காவியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

174


இயல் 79 வேந்தன் சுடுசொல் வேழன் கேட்டதும் காந்தும் மனத்தொடு கழறினன் வெகுண்டே. காவலன்றன் ஆணைக்கங் கஞ்சி நின்ற காவலனும் சீயத்தை அணுகி வந்தான்; மேவலர்தம் படைநடுக்கும் வேழன் சீறி வீரனுக்கோர் அறைகொடுக்க, ஐயோ என்று நாவலற மெய்யதிர மயங்கி வீழ்ந்தான்; நாடாள்வோன் முகம்நோக்கிச் சூரன் சொல்வான், காவலனே! நாட்டுக்கோர் பழியாய் வந்தாய்! கருத்தில்லாய்! பொறுப்பில்லாய்! கடமை யில்லாய்! 348 என்னுயிரும் மதியாமல் போரில் உன்னை எத்தனையோ முறைகாத்தேன்; அதற்கோ என்னைச் சின்னவனைக் கொண்டவையில் இகழ்ச்சி செய்தாய்? செருக்கொண்டு சிறிவரும் பகைவ ருக்கு முன்னணுக மாட்டல் அஞ்சிச் சாகும் மொய்ம்புடையோய்! வாய்மதமோ பேசு கின்ருய்? உன்னையொரு கடுகளவும் அஞ்ச கில்லேன்; ஒருவருக்கும் அடிபணியேன்; வீரங் கொள்வேன். 349

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/177&oldid=911320" இலிருந்து மீள்விக்கப்பட்டது