பக்கம்:வீர காவியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

மகப்பெறு படலம்


நாட்டின் பால் கொண்ட தொரு வேட்கை யாலுன் நன்றியிலாச் செயலெல்லாம் பொறுத்து வந்தேன்; மாட்டின் பால் கறக்காமல் பயனே நல்கும் மடியறுக்க முனைகின்ருய்! என நீ யாட்டும் ஆட்டம்போல் அடங்கியுனக் காடி நின்றேன்; அஞ்சியன்று; தாய்நாடு போற்றும் ஆசை: வாட்டும்போ தடங்குவதால் மன்ன! என்றன் வலிமைஎலாம் ஓர்ந்திலையோ? உணர்வாய் நாளை. 350 பொங்காமல் பொங்கிவரும் சீற்றங் கொண்டு புரிந்தெழுந்து கைப்பற்ற நான் நி னைத்தால் செங்கோலும் மணிமுடியும் நீய மர்ந்து சீரிழந்த அரியணையும் என்பாற் சேரும்; வெங்கோல! அரசிருக்கை கொள்ளும் ஆசை விளைகின்ற தினையளவும் என்பால் இல்லை; இங்காளும் அரசர்க்குப் பணிந்து போதல் என் போன்ருர் கடமைஎன அடங்கி நின்றேன். 351 முரசறைந்து போர்தொடுத்துப் பகைவன் வந்து முறுக்குங்கால் ஆற்ருமல் தோல்வி கண்டே அரசிழந்து நாடிழந்து செல்வம் நீங்கி அடவிதனில் கோவூரன் அலையுங் காலைப் பொர நினைந்தவ் வூரனுக்குச் சார்பாய் நின்று புகுந்தபகை கெட்டொழிய வாகை சூடி அரிநிவந்த இருக்கையினை அவனுக் கீந்தே அணிமுடியும் கவித்ததை நீ அறியாய் கொல்லோ? 352 SS S S S T T TTT T S T T T T S T S T T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/178&oldid=911322" இலிருந்து மீள்விக்கப்பட்டது