பக்கம்:வீர காவியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

16

இயல் 3



மூவகத்தின் வலிமைமிகப் பொலியக் கண்டு
நாவலத்துப் பெருங்கனகன் நாணி நின்றான்.

மூவகத்தின் பெயரோங்கி வலிவும் ஓங்கி
      முன்னிற்கும் பகையின்றித் தலைமை தாங்கிப்
பூவகத்துப் பொலியுமதன் பெருமை கண்டு
      புழுங்கிமனம் வெதும்பிஅழுக் காறு கொண்ட
நாவலத்துப் பெருங்கனகன் நாண முற்றான்;
      நாடோறும் அந்நினைவால் வாட லுற்றான்;
நோவகத்துப் பெருகிவரப் பகைவர் நாட்டை
      நுண்மதியால் வெல்லுதற்கு நினைத்தான் கேட்டை. 11

‘தோள்வலிமைப் படைசெலுத்தும் தலைவன் வேழன்
      துணையிருக்க மூவகத்து மதலைக் கோவை
ஆள்வலிமை மிக்கிருந்தும் போரில் வெல்லல்
      அரிதாகும்; மன்னனுக்குத் துணைநிற் பானைச்
சூழ்மதியாற் பிரித்தொதுக்கல் வேண்டும்; இன்றேல்
      தோன்றலவன் உயிர்தானே பிரிதல் வேண்டும்;
நாள்வரு’மென் றுண்ணினைந்து வேந்த னோடு
      நட்புரிமை பெருங்கனகன் பூண்டு நின்றான். 12


பூ – உலகம் நோவு – வருத்தம் உண்ணினைந்து – உன்நினைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/19&oldid=1354170" இலிருந்து மீள்விக்கப்பட்டது