வீரகாவியம்
198
இயல் 92
எழில் முகத்துப் பாலகன் நீ போர்தொ டுக்க ஏன்வந்தாய்? பிழைத்துப்போ! என்ருன் வேழன்.
'பால்வழியும் எழில்முகத்துப் பால! இங்குப்
பற்றியுனைப் பொருதுகொல மனமே யில்லை; ஏல்வலியை நீயெனினும் சிறுவன் அன்ருே!
யான்முதிர்ந்த பெருமறவன்; குருதி வெள்ளம் வேல்வழியிற் பாய்ந்தோடக் களங்கள் கண்டேன்
வெண்பூதன் மடிந்தொழியப் பொருது வென்றேன் சால்புடைய மறவர்குல மகனே! ஈன்ற
தாய்க்குரிய மகளுகப் பிழைத்துப் போபோ! 395
நான் பெற்ற மகன் போல உனை நி னைத்தே
நவில்கின்றேன் நயவுரைகள்; கேளென் சொல்லை; ஏன்பெற்ருய் இந்நிலையை? நாவ லத்தான் ஏவலுக்கோர் ஆளாகி மடிதல் வேண்டா! வான் பெற்ற பிறகளங்கள் புக்கு நின்றன்
வாள்வலிமை காட்டியங்கு வென்றி கொள்க! தேன் பெற்ற மொழியுனக்கு மனமி ரங்கிச்
செப்புகின்றேன் சென்றுபிழை! செல்வா' என்ருன், 396
ஏல் - (போருக்கு) ஏற்ற, வெண்பூதன் - மாவேழளுல் கொல்லப்பட்ட பெருவீரன்.