பக்கம்:வீர காவியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

போர்ப் படலம்


இயல் 114 தற்கொ?லக்கு முயன்ருனேத் தடுத்துக் காத்துத் தன்னினைவு பலித்திலதே எனக்க வன்ருன். எனயிழந்த துயர்தாங்கித் துடிக்கும் அன்னை இடர்துடைத்தல் நின்கடமை யன்ருே? ஐய! எனை யிழந்தாற் பெறலாகும்; நினையி ழப்பின் என்அன்னை நிலைஎன்ன? அடஒ அம்ம! முனையகந்தான் வீரனுக்குச் சொந்த மாகும்; மொய்ம்புடையோய்! நிற்காணும் ஆர்வம் உந்தி இனையவந்தேன்; கண்டுகொண்டேன்; மாற்ருன்வாளால் இறக்கவிலை: கவலற்க எந்தாய்! எந்தாய்! 457 வென்றிகொளும் பெருவீர! உடலி னின்று விலகாமல் உயிரின்னும் நிலைத்த தைய! துன்றிவரும் நாவலத்துப் படைஞர் எல்லாம் துயரின்றித் திரும்பவழி விடுதல் வேண்டும்; ஒன்றுபிழை செய்திலரால் ஒறுத்தல் வேண்டா; உடன்பிறவா விடினுமவர் உறவாக் கொண்டேன்; கன்றனையேன் எந்தையைத் தான் காண வந்தேன், கண்டுவந்தேன்; நினைவொன்று பலிக்க வில்லை. 458 முனையகம்-போர்க்களம். இணைய-வருத்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/234&oldid=911449" இலிருந்து மீள்விக்கப்பட்டது