பக்கம்:வீர காவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 காட்சிப் படலம்


செப்புகின்றேன் உண்மைநிலை சினவேல் ஐய! சியங்கள் பலகுழுமி எதிர்நின் ருலும் உட்புகுந்தே விளையாடி அவற்றை யெல்லாம் ஒவ்வொன்ரு எடுத்தெறியும் ஆற்றல் மிக்கான்; இப்புவியின் இளவரசி காதல் நெஞ்சில் இடங்கொ ண்ட பேறுடையான் யாவன் என்றே துப்பறியத் துடிக்கின்ருய்! நின்னை யன்றித் தொல்லுலகில் யாவருளார் வீரன் என்றே'. 77 எனமொழிந்த தோழியுரை கேட்டான் வீரன் இறும்பூது மீக்கூர நிலைத்து நின்ருன்; முனமெழுந்த சினமடங்கி, ஆங்கு நின்ற மொய்குழலி முகம்நோக்கி நகைத்துக் கையால் தினவெழுந்த தோள்தட்டி ஆர்த்த ஓசை திசையெங்கும் மோதிஎதிர் ஒலிக்கக் கேட் டான்; முனமடைந்த வென்றிகளிற் காணு இன்பம் மொய்ம்புடையான் நெஞ்சத் துட் புகுதக் கண்டான் 78 சினவேல்-கோபிக்காதே. சீயம்-சிங்கம். இறும்பூது-வியப்பு மீக் கூர-மேம்பட.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/50&oldid=911533" இலிருந்து மீள்விக்கப்பட்டது