பக்கம்:வீர காவியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 காட்சிப் படலம்


இயல் 23 பொய்கைக் கரைதனிலே- மா?லப் பொழுது வருகையிலே-வேழன் செய்கை எ லாமுணர்ந்தே-சென்று தேர்ந்திடு கென்றுரைத்தாள். உயிரனையாய்! எனக்கவர்ந்த காத லற்கண் டுரையாட வேண்டுமென உள்ளம் சற்றே மயலடையா நின்றதடி: நாணம் வந்து மறுத்துரைத்துங் கேட்கவிலை நானென் செய்வேன்! கயல்விழியோ உள்ளத்தை முந்தும் போலும் கண்டன்றித் துயிலில்லை என்று நிற்கும்; செயலறியேன் எதைச்சொல்வேன் எதைத் த டுப்பேன் செந்நெறியொன் றுரைப்பதுநின் கடனே' என்ருள். 90 பொறுமையுடன் உரையனைத்துங் கேட்ட தோழி, புன்முறுவல் செய்துசில மொழிவாள், அன்னய்! நறுமலரின் மனமாலை சூடும் நுங்கள் நடுவினில்யான் ஊசலென ஆடு கின்றேன்; மறுபகலின் கதிரவன் போய் மறையும் வேளை மலர்வனத்து வாவியின் பால் வேழன் தன்னை வருகவெனச் சொல்லிவந்தேன்; ஆங்கு நின்கை வரிசையெலாம் காட்டுதி” என் றகன்று சென்ருள். 9 1 மயல்-மயக்கம் வாவி-டொ ய்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/56&oldid=911547" இலிருந்து மீள்விக்கப்பட்டது