காட்சிப் படலம்
'பித்தரெனக் கலங்கி.மனம் மாறி மாறிப்
பேசுவதேன்? நகைமொழியோ? குறும்புச் சொல்லோ? நத்துவதை உரைக்காமல் தடுமாற் றத்தால்
நடுங்குவதேன்? பேதையர் பால் வீரர் காட்டும் வித்தையிதோ? வேண்டுவதை உறுதி செய்து
விளம்புதியேல் தடையில்லை தருதற் கென் ருள்; புத்தமுத மொழியிதனைச் செவியிற் கேட்டுப்
பூரித்தான் அம்மொழியால் மயங்கி விட்டான். 109
'பித்தத்தின் வேகந்தான் பேசு கின்றேன்;
பேதையுண் தெழிலுருவைக் கண்ட பின்பே சித்தத்தின் நிலைகலங்கிச் செயல்க லங்கித்
தெரிவையுனை நினைந்திரங்கி மயங்கி நின்றேன்; முத்தமிழின் சுவையனைத்தும் நின்வாய்ச் சொல்லில்
முகிழ்த்துவரக் காணுவதால் தெளிவுங் கொண்டேன்; நத்துவதிப் பூங்கொடியே வேருென் றில்லை
நல்குதியேல் வானுலகும் வேண்டேன்' என்ருன்.. 110
'ஈவாருங் கொள்வாரும் இங்கே யில்லை
உரிமைதனைக் கொள்வற்கோர் தடையு மில்லை; பூவாருங் கொடிக்குரியை நீயே என்று
பூண்டுள்ளேன் ஓருறுதி; கண்ட ஞான்றே நீவேறு நான் வேறென் றெண்ண வில்லை
நீங்கியது நானெனதென் றெண்ண மன்றே! கூவாத குயிலொன்று கூவக் கண்டேன்
குழைவாக மனமின்று குளிரக் கண்டேன். 111
_
நத்துவது - விரும்புவது. பூ.ஆரும் --- பூ நிறைந்த ஞான்று - பொழுது,நத்துவது - விரும்புவது. பூ ஆரும் - பூ நிறைந்த ஞான்று - பொழுது.