பக்கம்:வீர காவியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 திருமணப் படலம்


இயல் 35 துணையா வோன் வேழனெனத் தோழி சொல்ல மன நாளே முரசறைய மன்னன் சொன்னுன். 'மணமகளுய் மருமகளும் மாலை சூட மாவேழன் வருமென்ருல் மறுப்பா ருண்டோ? நிணமருவு நெடுவேலான் பெயரைச் சொன்னல் நீணிலத்துக் குறைசொல்ல எவரே உள்ளார்? மணமலர் சூழ் நெடுங்குழலாள் இவனை எய்த மாதவமே செய்திருத்தல் வேண்டும்; வேந்தர் கண முழுதும் இவனிழலில் வாழும் போது களிறனையான் தகுதிக்கோர் குறைதான் ஏது? 146 என்மகளோ பிழைசெய்வாள்? இல்லை! இல்லை! என்குலத்துப பெருமையினை உயர்த்தி விட்டாள்! பொன்மலரில் நறுமணமே தோன்றிற் றென்னப் பூவையிவள் மனத்தெழுந்த ஆர்வ மெல்லாம் தன்னளவிற் கைக்கிளையாய் விடுமோ என்று தயங்குகிறேன்; மாவேழன் இசையா ளுகின் மின்னனையாள் வேல்விழியின் நெஞ்சில் துன்பம் மிடைந்துவிடும் வாழ்வுமொரு கான லாகும்.' 147 TT SS S S S S S S S S S S S TS T S TS T S T T T T TT T T TT S

  • சீட்டுேப்பு.

會炒

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/82&oldid=911604" இலிருந்து மீள்விக்கப்பட்டது