பக்கம்:வீர காவியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 திருமணப் படலம்


'அளப்பரிய நூல்பலவும் கற்ரு ரேனும் அறிவொன்றும் அறியாத மற்ரு ரேனும் களப்புலிகள் பலகொடுத்த வலிய ரேனும் கனவகத்தும் போர்காணு மெலிய ரேனும் உளப்படுத்தி உலகியலிற் சிறந்தா ரேனும் உறவறுத்துப் பற்றனைத்தும் துறந்தா ரேனும் விளக்கரிய காதலெனும் கூத்துள் நின்று விளையாடா மாந்தரெங்கும் இல்லை' என்ருள். 151 தோழியுரை கேட்டரசன் நகைத்து நின்று 'துடியிடையாள் மணமுடிக்க முயன்ற உன்னை வாழியென வாழ்த்துகின்றேன்; நாளை யந்த மாவேழன் தனைக்கூடி அளவ ளாவி, ஏழிசையின் இயமுழங்கச் சான்ருேர் வாழ்த்த இளவரசி மனமாலை சூடும் நல்ல நாழிகையும் மங்கல நன் னுளும் ஆய்ந்து நகருக்கு முரசறைந்து சொல்வோம்' என்ருன். 152.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/84&oldid=911608" இலிருந்து மீள்விக்கப்பட்டது