பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 13 மாயத்திரை விலகட்டும்; தூய காவியம் தொடரட்டும். மன அரங்கத்தில் வீர ஒளி பரவட்டும். தேசபக்தியை, தேசீய சக்தியை அறிந்து பெருமைப்படுத்தும், சில வீரர்களுக்கு நமது இதயக்கனிந்த நன்றி. இைனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்...... ......? ...வேண்டாம், ஜகத்தினை அழிக்கும், புரட்சி எரி மலை சீறிப் பாயுமுன்பு இந்த காட்டில் கல்லது கடக்கட் டும். சுத்த வீரர்கள் வெல்லட்டும். மகாத்மாவின் சத்ய வசனங்கள் நிறைவேறட்டும். அரசியல் மந்திரங்களும் ஆதிக்கவாதிகளின் தந்திரங்களும் மறையட்டும் கடமை வீரர்களது காரிய உறுதிபெருகட்டும். இந்தியாவின் வீரவிடுதலைக்கு இன்று ஏற்பட்டிருக்கும் பிரிவினை வியாதி குணமாகட்டும்-சத்தியம் வெற்றிபெறட்டும்!