பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விர சுதந்திரம் நீலகண்ட ஆம், சாந்தி மலர் சக்திதேவிக்குப் பிடிக்க வில்லை; அன்னை மாகாளி சோதக்கிருள். இருந் தாலும் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். வெறும் கையால் முழம் போடுவதால் வேட்டி கிடைத்துவிடாது தம்பி வெடியை வெடியால்தான் வெல்ல முடியும். வாஞ்சி : வரவர நீங்கள் வேதாந்த பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்! நீலகண்ட : வாஞ்சி, அரக்கபலம் படைத்த வெள்ளே ஆட்சியை எதிர்க்க ஆயுதபலம் தேவை இப்போது: கம்மிடம் இருக்கும் சில துப்பாக்கிகள் போதாது; சீக்கிரமே காம் எதிர்பார்க்கும் ஆயுதங்கள் வரும் ஜெர்மனியிலிருந்து டாக்டர் சண்பகராமன் பிள்ளை ஒரு கப்பல் நிறையக் கனரக ஆயுதங்களே அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதை எதிர்பார்த்துப் பாண்டிச் சேரியிலே வீரர் வ. வே. சு காத்துக் கொண்டிருக்கிருர், வரட்டும்; வந்ததும், ஆதிக்க வெறியர்களுக்கு தீபாவளிப் பண்டிகை கொண்டாடு வோம். (உணர்ச்சியும் எழிச்சியுமிக்க உரத்த குரலில்) உம்; அன்னே முன் ஆணையிடுங்கள். உற்ற துனேவியிடமும் பெற்ற தாயிடமும் நமது ரகசியத் தைச் சொல்ல மாட்டோம். உடல், பொருள், ஆவி அனைத்தையும் சுதந்திரத்துக்காகப் பலி கொடுப் போம். இதோ...இதோ...உறுதி மொழிப் பத்திரம், கம் உயிரின் ஊற்ருன இரத்தத்தால் கையொப்ப மிடுங்கள். {முதலில் அவர் காளி அன்னையின் குலத்தில் தனது பெரு விரலை அரிந்து, அதிலிருந்து பிறிட்ட ரத்தத்தால் கையெழுத்திடுகிருர்,