பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 110


அவனுடைய ஒழுக்கநெறி சார்ந்த நுண்புலம் மனித வாழ்வின் நிறை வட்டத்தை உய்த்தறிந்து விடுகின்றது.

இரக்கந் தோய்ந்த நுண்புலம் மனிதனை விடுதலை, களிப்பு ஆற்றல் ஆகியவற்றின் உணர்வு நிலைக்கு உயர்த்தி வடுகின்றது. அவனுடைய மூக்சுப் பைகள் காற்றை உட்கொள்வது போன்று அவனுடைய ஆன்மா களிப்பை உட்கொள்ளும். கூட்டாளிகளாலோ, பகைவர்களாலோ அவனுக்கு அச்சங்கள் எப்போதும் உண்டாவதில்லை. தவழ்ந்து வரும் இந்த மாயைகள் மறைந்துவிடுகின்றன. அவனுடைய எழுச்சி ஊட்டப்பெற்ற திருப்பார்வைக்கு எதிரில் பேராற்றலும், மேம்பாடும் கொண்ட ஆட்சி வந்தமைந்து விடுகின்றது.