பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

ஜேம்ஸ் ஆலன்



இயல்பார்வம்

மனித சமூகம் அதன் இயல்பார்வத்தாலேயே ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. ஓர் உலக உண்மைப் பிசகு ஓர் உலக நம்பிக்கையின்மையைப் பிறப்பித்துவிடும். அது அழிவை உண்டு பண்ணாவிட்டாலும் ஓர் உலகப் பிளவைக் கொணர்ந்துவிடும்.

நாம் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கின்ற ஆழ்ந்து வேரூன்றிய நம்பிக்கையாலேயே வாழ்வு தெளிந்த அறிவுநிலை உடையதாய், நற்பயன் விளைப்பதாய், மகிழ்ச்சியுடையதாக ஆக்கப்படுகின்றது. நாம் மனிதரை நம்பவில்லையெனின் அவர்களுடன் நாம் எவ்வகைத் தொடர்பும் வைத்துக்கொள்ள வியலாது. அவர்களுடன் சேர்ந்து பழகக்கூட இயலாது. தனது மடமையின் காரணமாக மனித இன இயல்பார்வத்தின் மீதிருந்த நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்ட மனிதனின் இழிநிலையையே ஷேக்ஸ்பியரின் “தைமான்” நாடகம் நமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. அவன் மனிதர் அனைவருடைய சேர்க்கையினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்கின்றான்; இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றான்.

எந்தத் துறையினின்று நம்பிக்கை விடுவிக்கப்-