பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 114



கலைத்திறம் வாய்ந்த நடிகன் மேடையில் பாராட்டப்படுகின்றான். ஆனால், வாழ்வெனும் மேடையில் போலி நடிகன் தன்னை இகழ்ச்சிக்கும், ஏளனத்திற்கும் உரியவனாகத் தாழ்த்திக் கொள்கின்றான். தான் இயல்பாக இல்லாத நிலையினில் தோற்றமளிக்க முயற்சி செய்வதில், அவன் தனித்தன்மையில்லாத, குணவியல்பு இல்லாத ஒருவனாகி விடுகின்றான். அவன் செல்வாக்கு அனைத்தும், ஆற்றல் அனைத்தும், வெற்றி அனைத்தும் இழந்தவனாகி விடுகின்றான்.

கணப் பொழுதிற்கு வண்ணப் பூச்சான வாழ்வால் தற்பெருமை கொள்பவர்களோ திறமையாக வீசப்படுகின்ற மோசடியில் மனநிறைவு காணுபவர்களோ செல்வாக்கின் ஏமாற்றத்திலிருந்து தப்ப முடியாது; அவை நெஞ்சத்தை உருக்கி, நிலைபேறுடைய, இறுதியான பயன்களுக்காகத் தீர்ப்பை உருவாக்குகின்றன. அதே வேளையில், திட்டமிடப்பட்ட இந்த ஏமாற்றங்கள் மனத்தின் மேற்பரப்பில் கணநேரச் சிற்றலைகளையே உண்டு பண்ணுகின்றன.

“மெய்யொலி எழுதல்” என்பது பொருள் பொதிந்த சொல்லாகும். நாணயத்தைச் சுண்டிப் பார்க்கும்போது அது தரக் குறைவான உலோகப் பொருளின் கலப்பின்றி முழுவதும் தூய்மையான உலோகப் பொருளால் ஆக்கப்பட்டதென்பதைப் புலப்படுத்தும் ஒலியை, எழுப்புவதையே இது குறிப்பிடுகின்றது. அது உயர்நிலைக்கு வந்துவிடுவதால், எங்கும், எல்லாவிடத்தும் செல்லுபடியாகும்.

மனிதர் நிலையும் அதுவே. அவர்களுடைய