பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 156



மனிதன் தனக்காகவோ சமூகத்திற்காகவோ உழைக்க வேண்டும். அவன் நொண்டியாகவோ, சீர்ப்பட முடியாத முடமாகவோ, மனதைப் பொறுத்த அளவில் பொறுப் பற்றவனாகவோ அவன் எதிரிடையாக எதையுமே தர முடியாதவனாய்த் தான் கொண்டிருப்பவை அனைத்திற்கும் பிறரை நம்பியிருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். அத்தகைய நிலையே விடுதலை என எவரேனும் கருதினால், அதுவே அடிமைத் தனத்தின் கீழ்த்தரமான தன்மைகளில் ஒன்று என்பதை அவன் தெரிந்து கொள்ளட்டும். தற்போதைய நடப்புகளைக் கொண்டு பார்க்கையில், ஒருவன் சாதாரண காலாடியாக இல்லாமல் மதிப்பிற்குரிய சோம்பேறியாக இருப்பினும், சுறுசுறுப்பான மக்கட் கூட்டத்தின் கண் சோம்பேறியாக இருத்தல் மக்கட்குலத்திற்கே வெட்கக் கேடாவதுடன், மேற்கொண்டு மதிக்கப்படத் தக்கதாயில்லாத காலமும் வந்தே தீரும். கையாலோ மூளையாலோ சம்பாதிக்கின்றான். அவன் செல்வனாகவோ எளியவனாகவோ பிறந்திருப்பினும் இதைச் செய்கின்றான்; ஏனெனில்,செல்வம் சோம்பேறித்தனத்திற்குச் சாக்குப் போக்காக முடியாது. உண்மையில், அவை கொண்டுள்ள அரிய திறமைகளைக் கொண்டு சமூக நன்னிலைக்கு உழைக்கும் ஒரு வாய்ப்பாகும். தன்னைத் தான் ஆதாரமாகக் கொண்டவனே விடுதலையும் தற்சார்பும் தன்னாண்மையும் உடையவனாவான்.

இவ்வாறாக எட்டு ஆதாரங்களின் தன்மையும்