பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 160



இந் நூல் காட்டும் பயிற்சியின் படியே தமது வாழ்வுக் கோயிலைக் கட்டத் தொடங்குவோர் இதை மனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு கட்டிடத்தை எழுப்புவதெனின் அதற்குக் காலம் தேவைப்படுகின்றது. செங்கல் மேல் செங்கல், கல்மேல் கல் வைத்துப் பொறுமையோடுதான் எழுப்ப வேண்டும். தூண்கள் உறுதியாக நடப்பட்டு மேல் பூச்சும் பூசப்பட வேண்டும். அதனை முடித்து முழுமையாக்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகின்றன. அதே போன்று, உட்புறமனக் கோயிலாகிய கட்டிடம் கண்ணுக்குப் புலப்படாதது, ஓசையற்றது என்பதற்காக உண்மையாகவும், திடமாகவும் அமைந்திருப்பதில் அதைவிட எந்த அளவிலும் குறைவுடையதன்று.

தோழர்களே! உங்களது குணவியல்பைக் கட்டாக அமையுங்கள், உங்களது வாழ்வெனும் இல்லத்தை எழுப்புங்கள், உங்களது ஆக்கக் கோயிலைக் கட்டுங்கள்.