பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 34




மாறாக, உறுதிப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் மனத்தின் மேம்பாட்டை நாம் நம்முடனே கொண்டு செல்வதாயிருப்பின், நம்மைச் சூழ்ந்திருப்போர் அதைப் புரிந்து கொள்வதோடு கவர்ச்சியும் அடைகின்றனர். அவர்கள் ஏனென்று அறிந்து கொள்ளாமலே நன்னோக்குடன் நம்மை அணுகி வருவர்; நண்பர்களையும், நல வாய்ப்புகளையும் கொணர்ந்து, நம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணப் பேருதவியாகவுமிருப்பர், நம் காரியங்கள் அனைத்திலும் ஆற்றல் வாய்ந்த விளையாட்டாகவும் விளங்குவது அந்த நற்பண்பே ஆகும். அது நம் தவறுகளைக் கூட நேர்படுத்திவிடும்; திறமைக் குறைவுகளின் தீய விளைவுகளை, எண்ணிறந்த குறைபாடுகளை மூடி மறைத்துப் பெரிதும் மட்டுப்பத்திவிடும்.

எனவே, நாம் கொடுக்கின்ற அளவைப் பொறுத்தே உலகத்தின் கைகளிலிருந்து நாமும் பெறுகின்றோம். தீமைக்குத் தீமை, நம்மைக்கு நன்மை. மாசு படிந்த ஒழுக்கத்திற்கு மட்டான செல்வாக்கும், நிறைவற்ற வெற்றியுமே. மேம்பட்ட ஒழுக்கத்திற்கு நிலைபெறும் ஆற்றலும், நிறைவுற்ற வெற்றியுமாம். மூட மனிதன் தோல்வியுறுகின்றபோது பிறரைத் தூற்றுகின்றான். தன் மீது தவறேதும் காணுவதில்லை; ஆனால் அறிவுடைய மனிதன் தன்னைத்தான் கண்காணித்துத் திருத்திக் கொள்கின்றான். அதனால் அவனுக்கு வெற்றி உறுதியாகி விடுகின்றது.

விழிப்புணர்ச்சியும், சுறுசுறுப்புமுடைய மனம் கொண்ட மனிதன், அதன் பயனாகத் தன்னுடைய